நஜிப் மனைவி, உதவியாளர் மீது நாளை புதிய குற்றச்சாட்டுகள்

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப்பின் மனைவி ரோஸ்மா மீதும் அவரது முன்னாள் உதவியாளர் ரிஸால் மன்சூர் மீதும் நாளை புதிதாக 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட விருப்பதாக தகவல்கள் கூறு கின்றன. சரவாக் மாநிலத்தில் உள்ள கிராமப்புற பள்ளிகளுக்கான 1.25 பில்லியன் ரிங்கிட் (S$412 மில்லியன்) மதிப்பிலான சூரிய சக்தி ஹைப்ரிட் திட்டம் தொடர்பில் அவர்கள் மீது குற்றம் சாட்டப்படும் என்று தெரிகிறது.

ரோஸ்மா மீது நாளை குற்றம் சாட்டப்படவிருப்பதை அவரது வழக்கறிஞர் கீதன் ராம் வின்சென்டும் உறுதிப்படுத்தி யுள்ளார். ஆனால் எத்தகைய குற்றச்சாட்டுகள் என்பது தங்களுக்குத் தெரியாது என்று அவர் கூறினார். ரோஸ்மா மீது ஏற்கெனவே பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நாளை காலை 8.30 மணிக்கு கோலாலம்பூர் நீதிமன்றத்திற்கு வருமாறு ரோஸ்மாவிடம் கூறப்பட்டுள்ள தாகத் தெரிகிறது.

கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி புத்ரா ஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத் தில் ரோஸ்மா வாக்குமூலம் கொடுத்தபோது அவர் கைது செய்யப்படுவதாக அறிவிக்கப் பட்டது. அதற்கு மறுநாள் கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் அவர் மீது 17 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. சரவாக் கிராமப்புற பள்ளி களுக்கான ஹைப்ரிட் திட்டத்திற் காக ஒதுக்கப்பட்ட நிதியை சிலர் தவறாகக் கையாண்டது கடந்த ஜூன் மாதம் வெளியில் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் ரிஸால் கைது செய்யப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!