பொருளியல் முன்னேற்றத்தை தக்கவைக்க தென்கிழக்காசியா, சீனா ஆகியவற்றின் பொருளி யல்கள் வெளிப்படையாக இருப் பதுடன் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கவும் வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித் திருக்கிறார். ஆசியான்=சீனா உச்சநிலை கூட்டத்தில் பேசிய திரு லீ, ஆசி யானுக்கும் சீனாவுக்கும் இடை யிலான தற்போதைய சிறப்பான உறவை மேம்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை வழங்கினார். ஆசியான்=சீனா தடையற்ற வர்த்தக பகுதிக்கான மேம்பாட்டு வழிமுறையை முழுமையாக செயல் படுத்தினால் இந்த உறவு மேம்படும் என்று திரு லீ கூறினார். சீன சந்தையில் ஆசியான் நிறுவனங்கள் நுழைவதை இந்த ஒப்பந்தம் மேலும் சுலபமாக்கும் என்றார் அவர்.
புதிய கட்டடங்களைக் கட்டும் அதே நேரத்தில் தற்போதைய கட்டடங்களைச் சிங்கப்பூர் மேம் படுத்துவதுபோல இந்த ஒப்பந்தம் இருப்பதாக சீனப் பிரதமர் லி கெச்சியாங் தெரிவித்தார். "சீனா தற்போது ஆசியானுட னான தடையற்ற வர்த்தக ஒப்பந் தங்களை மேம்படுத்தும். புதிதான ஒப்பந்தங்கள் இடம்பெறவில்லை," என்றும் அவர் கூறினார். ஆசியான்=சீனா ஆகாய போக்குவரத்து ஒப்பந்தத்தை தாராளமயமாக்கும் முயற்சியில், தனியார் மூலதனத்தையும் அனைத்துலக நிதி நிறுவனங் களையும் பயன்படுத்தி ஆசியா னின் உள்கட்டமைப்புக்குத் தேவைப்படும் நிதியைத் திரட்ட லாம் என்று பிரதமர் லீ கூறினார்.
முழுமையான வட்டார பொருளியல் பங்காளித்துவம் குறித்த உச்சநிலைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் லீ சியன். பிரதமருடன் வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுங் சிங் (இடது), வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (வலது). படம்: இபிஏ