சிங்கப்பூர்: தேசிய நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங், வருங் காலத்தில் தாம் அரசியலில் நுழையலாம் எனத் தெரிவித்திருக் கிறார். பிபிசி செய்தி நிறுவனத் திற்கு நேற்று முன்தினம் அளித்த பேட்டி ஒன்றில் அரசியலில் நுழை வாரா என்ற கேள்விக்கு, "மாட் டேன் என்று சொல்லமாட்டேன். ஒருவேளை நுழையலாம்," என அவர் பதிலளித்தார்.
ஸ்கூலிங் அரசியலில் நுழைந்தால், அரசியல் வாதிகளாக மாறிய முன்னைய விளையாட்டாளர்களான ஆர்னல்ட் சுவாட்ஸனேகர், மென்னி பக்கியோ ஆகியோரின் வரிசையில் சேர்வார். தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தம்மால் முடிந்ததைச் செய்வேன் என்றார் ஸ்கூலிங். இரு நாட்களுக்கு முன், ஃபினா உலகக் கிண்ணப் போட்டியின் வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சலில் ஸ்கூலிங் நான்காவது இடத்தைப் பிடித்தார்.