பொறியியல் பட்டதாரிகளாக பட்டம் பெற்றதும் அரசாங்கச் சேவையில் சேரும் பொறியாளர்களுக்கு மாதச் சம்பளம் $3,800 ஆக இருக்கும். தகவல், தொடர்பு தொழில்நுட்பத் துறையினருக்கு மாதச் சம்பளம் $4,000 முதல் கிடைக்கும்.
துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் நேற்று நாடாளுமன்றத்தில் இதனை அறிவித்தார். இந்தச் சம்பளம் சராசரியாக 20% அதிகம் என்றார் அவர். இப்பொழுது அரசாங்கச் சேவையில் பணியாற்றும் பொறி யாளர்களுக்கான சம்பளம் மறு பரிசீலனை செய்யப்பட்டு தேவை யெனில் சம்பளம் உயர்த்தப்படும் என்றும் அவர் மன்றத்தில் குறிப் பிட்டார்.