பல இன மக்கள் வாழும் சிங்கப்பூரில் 'சிங்கப்பூரர்' என்ற உணர்வுடன் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து ஒற்றுமையைக் கட்டிக் காக்க வேண்டும் என்று தற் காலிக கல்வி அமைச்சர் (உயர் கல்வி, திறன்கள்) ஓங் யி காங் வலியுறுத்தியுள்ளார். லிட்டில் இந்தியா வர்த்த கர்கள் மரபுடைமைச் சங்கத் தால் (லிஷா) ஏற்பாடு செய்யப் பட்ட இந்தியப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி கேம்பல் லேனில் நேற்றிரவு நடந்தது. இதில் சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஓங், "சிங்கப்பூரின் பன்முகத்தன்மை ஆழமானது.
சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள், யூரேஷியர்கள் என மேலோட்டமாக மட்டும் இல்லாமல் அந்த ஒவ்வொரு பிரிவினரிடத்தும் பல உட்பிரிவு கள் உள்ளன. "சீனச் சமூகத்தில் ஹொக் கியன், தியோச்சியூ, ஹக்கா, கேன்டனிஸ் என்றும் மலாய்க் காரர்களில் ஓராங் மலாயு, போயானிஸ், ஜாவனிஸ், பூகிஸ் என்றும் இந்தியர்களிடத்தில் தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், சீக்கியர்கள் என்றும் பல இனங்கள் உண்டு.
இந்தியப் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்களுக்கு வணக்கம் கூறும் அமைச்சர் ஓங் யி காங். உடன் 'லிஷா' தலைவர் திரு ராஜ்குமார் சந்திரா. படம்: திமத்தி டேவிட்