சிங்கப்பூரர்களுக்கு மேம்பட்ட வேலைகளை உருவாக்குவதற்கு, தொழில்நுட்பத்துக்கேற்ப சிங்கப்பூர் விரைந்து செயல்படுவதுடன் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார். வளர்ச்சி அடைந்த நாடுகளில் இன்னும் 10 முதல் 20 ஆண்டுகளில், உருவாக்கப்பட்ட வேலை களைவிட அதிகமாக வேலை இழப்புகள் ஏற்பட்டு வேலையின்மைப் பிரச்சினை அதிகரிக்கும் என்ற பயம் நிலவி வருவதாக புகுமுக வகுப்பு மாணவர்கள் 550 பேருக்கிடையே உரையாற்றியபோது துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.
பொருளியல், சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு தர்மன், "சிறிய சமுதாயத்தையும் அனைத்துலகச் சந்தையையும் கொண்டிருப்பதால் நாம் அந்தச் சூழலைத் தவிர்க்க முடியும். தொழில்நுட்பத்துக்கு ஏற்ப விரைந்து செயல்படுவதுடன் அந்தத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்திக்கொண்டு ஒவ் வொருவருக்கும் மேம்பட்ட வேலைகளை உருவாக்கிக் கொள்வதை உறுதிப்படுத்துவதன் மூலம் அந்தச் சூழல் வருவதற்கு முன்பாகவே தவிர்க்கலாம்," என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு வேலையிலும் மனிதர்களின் செயல்திறன்களை விரிவுபடுத்துவதையும் திருப்தி யளிக்கும் விதத்திலான வேலை களை உருவாக்குவதையும் குறிப்பிட்டு, "தொழில்நுட்பம் நம்மைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக நாம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது," என்றும் அவர் சொன்னார்.
இளமைப் பருவத்தில் இயன்றவரை அனைத்தையும் கற்பதை வலியுறுத்தும் சிங்கப்பூரின் தற்போதைய கல்வித் திட்டம் 2035ஆம் ஆண்டுவாக்கில் காலாவதியாகிப் போகும் என்று புகுமுக வகுப்பு மாணவர்களுக்கான கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களிடையே பேசிய துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் (கையில் கோப்பையுடன்) கூறினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்