செம்பவாங்கின் இயற்கைச் சூழலை ஒன்றிணைத்து உருவாகிறது புதிய செம்பவாங் ஒருங்கிணைக்கப்பட்ட விளையாட்டு, சமூக மையம். செம்பவாங் எம்ஆர்டி நிலையம் அருகே 12 ஹெக்டர் பரப்பளவில் அமையவுள்ள இந்த மையம், இயற்கைச் சூழலுடன் கூடிய நீச்சல் குளம் முதல் காட்டு நடைபாதைகள், சுற்றுச்சூழலைப் பாது காக்கும் வகையில் நீர் சேமிப்பு கருவிகள், மின்சக்தி சேமிப்பு விளக்குகளுடன் கூடிய உணவங் காடிகள் போன்ற பல வசதிகளைக் கொண்டிருக்கும்.
நீர் நிலை, விளையாட்டு, உடல் ஆரோக்கியம் போன்றவற்றை மையப்படுத்தி உருவாக்கப்படும் இந்த மையத்தில் பல்நோக்கு விளையாட்டு இடங்கள், சமூகத் தோட்டங்கள் போன்றவையும் இடம்பெறவுள்ளன. செம்பவாங் எம்ஆர்டி நிலையம் அருகே நேற்று நடைபெற்ற சாலைக்காட்சியில் போக்குவரத்து அமைச்சரும் செம்பவாங் குழுத்தொகுதி நாடளுமன்ற உறுப்பின ருமான திரு கோ பூன் வான் புதிய மையம் குறித்து மக்களிடம் விளக்கினார்.
பகல் நேர பராமரிப்பு சேவை, இயன்மருத்துவ சேவை போன்ற சேவைகளையும் வழங்கும் முதி யோர் பராமரிப்பு நிலையமும் இந்த மையத்தில் அமையவுள்ளது. "செம்பவாங் வட்டாரத்தின் இயற்கைச் சூழலையும் மரபுடைமை யையும் ஒருங்கிணைத்து புதிய மையம் அமைக்கப்படுவது முக்கியம்," எனக் கூறினார் தற்காலிகக் கல்வி அமைச்சரும் செம்பவாங் குழுத்தொகுதி நாடளுமன்ற உறுப்பினருமான திரு ஒங் யீ காங்.
செம்பாவாங்கில் புதிய ஒருங்கிணைக்கப்பட்ட விளையாட்டு, சமூக மையம் அமையவுள்ள பகுதிக்கு நேற்று செம்பவாங் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மையத்தின் உருவாக்கத்தில் பங்கெடுத்துள்ள மற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும் வருகையளித்தனர். இடமிருந்து தேசிய பூங்கா கழகத்தின் தலைவர் திரு கென்னத் எர், செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் லிம் வீ கியாக், போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்