நான்கு ஆண்டுகால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சிங்கப்பூர் அரசாங்கமும் ரயில் வண்டிகளை இயக்கிவரும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் புதிய ரயில் நிதிக் கட்டமைப்புக்கு மாறுவது குறித்த உடன்பாட்டுக்கு வந்துள்ளன. அக்டோபர் மாதம் முதல் தேதியிலிருந்து நடப்புக்கு வரவுள்ள இந்தப் புதிய கட்டமைப்பின்படி எஸ்எம்ஆர்டி யிடமிருந்து அனைத்து செயல் பாட்டு சொத்துகளையும் சுமார் $1 பில்லியனுக்கு அரசாங்கம் வாங்க இருக்கிறது.
ரயில் சேவையைச் செயல் படுத்துவதற்கான உரிமத்துக்கு ஆண்டு அடிப்படையில் எஸ்எம்ஆர்டி நிறுவனம் கட்டணம் செலுத்தும். புதிய கட்டமைப்பின்படி கடுமையான பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சேவைத் தரத்தை உயர்த்தவும் ரயில்களை இயக்கும் நிறுவனம் ஒப்புதல் அளிக்கும். விதிமுறைகள் மீறப்பட்டால் தற்போது இருப்பதைவிட கூடுதல் அபராதம் விதிக்கப்படும். "தேவைக்கேற்ப அதிக ரயில் களைச் சேவையில் இணைப்பது, ஏற்கெனவே இருக்கும் ரயில் சேவை தொடர்பான சொத்துகளை மேம்படுத்துவது போன்றவற்றை நிலப்போக்குவரத்து ஆணையம் குறித்த நேரத்தில் மேற்கொள்ளும்.
இதன் வழியாக நம்பகமான ரயில் சேவை கிடைப்பதுடன் கூட்ட நெரிசலும் குறையும்," எனப் புதிய ரயில் நிதிக் கட் டமைப்பினால் பயணிகள் பெறும் நலன்கள் குறித்து உள்கட் டமைப்புக்கான ஒருங்கிணைப்பு, போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் கூறியுள்ளார்.
"உயர் தரத்திலான, நம்பகமான, பாதுகாப்பான சேவை வழங்கும் நோக்கில் எஸ்எம் ஆர்டி ரயில் நிறுவனம் செயல்பட இந்த மாற்றங்கள் அனுமதிக்கும்," என எஸ்எம்ஆர்டியின் தலைவரும் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரியுமான டெஸ்மண்ட் குவெக் குறிப்பிட்டுள்ளார்.