சிங்கப்பூர் கார்கள் மலேசியா வுக்குள் நுழையும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது பாரபட்சமானது என்றும் அதை ஈடுசெய்ய நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் சிங்கப்பூர் போக்கு வரத்து அமைச்சு கூறியுள்ளது. சிங்கப்பூருடனான எல்லை களில் உள்ள சோதனைச்சாவடி களில் மட்டும் இந்தக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை அமைச்சு சுட்டியது.
சாலைக் கட்டணம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய கட்டணம் நேற்றிலிருந்து நடை முறைப்படுத்தப்பட்டது. இருப்பி னும், மலேசியாவுக்குள் நுழையும் இந்நிலையில், புதிய சாலைக் கட்டணம் சிங்கப்பூர் கார்களுக்கு எதிராகப் பாரபட்சமான நடவ டிக்கை அல்ல என்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
"புதிய சாலைக் கட்டணம் சிங்கப்பூருடனான எல்லையில் மட்டும் நடைமுறைப்படுத்தப்படாது. தாய்லாந்து, புரூணை, இந்தோனீ சியா ஆகிய நாடுகளுடனான எல்லைகளிலும் நடைமுறைப் படுத்தப்படும். அந்த நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள கார்கள் மலேசியாவுக்குள் நுழையும்போது சாலைக் கட்டணமாக 20 ரிங்கிட் செலுத்தவேண்டும்," என்று திரு லியோ கூறியதாக பெர்னாமா செய்தி அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகள் வாயிலாக மலேசியாவுக்குள் நுழையும் சிங்கப்பூர் கார்கள் 20 ரிங்கிட் சாலைக் கட்டணம் செலுத்த 'டச் அண்ட் கோ' முனையங்கள் அமைக்கப் கப்பட்டுள்ளன. படம்: பெரித்தா ஹரியான்