- சுதாஸகி ராமன் -
தங்களுக்கு இருவிதப் பேச்சுத் தமிழைப் பேசக்கூடிய நிர்பந்தம் இருப்பதாகவும் இதனால் நல்ல தமிழில் பேச தங்களுக்குச் சவால்கள் அதிகரிப்பதாகவும் இளையர் தெரிவித்துள்ளனர். வருங்காலத்தில் இத்தகைய சவால்களைச் சமாளித்து நல்ல தமிழில் பேசிப் பழக தங்க ளிடையே முயற்சிகள் அதிக மாகவேண்டும் என்றும் அவர் கள் குறிப்பிட்டனர். இந்திய மரபுடமையைப் பற்றியும் தமிழ்மொழியை எதிர் காலத்திற்கு எடுத்துச் செல்ல என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும் சிந்திக்கத் தூண்டும் விதத்தில் தமிழர் பேரவையும் தேசிய நூலகமும் இணைந்து நேற்று ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் இளையர் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். 'சுவடுகள்: சிங்கை யில் பேச்சுத்தமிழ் = நேற்று இன்று நாளை' என்ற அந்த நிகழ்ச்சியில் பேச்சுத்தமிழ் கண்டுள்ள மாற்றங்கள், தமிழ் மொழியை வாழவைக்க எடுக் கப்பட வேண்டிய முயற்சிகள் போன்றவை கலந்தாராயப்பட்டன.
கலந்துரையாடலில் கருத்துகளை முன்வைக்கும் (இடமிருந்து வலம்) தமிழ் முரசின் இணையாசிரியர் வீ.பழனிச்சாமி, நிகழ்ச்சியை வழிநடத்திய முனைவர் ச.ஜெகதீசன், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் அருண் வாசுதேவ் கிருஷ்ணன். படம்: திமத்தி டேவிட்