செங் சான்- சிலேத்தார் நடை, சைக் கிளோட்டம், சவாரி என்னும் நிகழ்வு நேற்று அங் மோ கியோவில் நடை பெற்றது. அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அடித் தள ஆலோசகருமான பிரதமர் லீ சியன் லூங் சுமார் 2,000 குடியிருப் பாளர்களுடன் நிகழ்வில் பங்கேற்றார். சாலைப் பாதுகாப்பின் மீது விழிப் புணர்வை ஏற்படுத்துவதும் முதியோ ருக்கும் குழந்தைகளுக்கும் பாது காப்பு முறைகளை சொல்லித் தரு வது இந்நிகழ்வின் குறிக்கோள். சாலையைப் பயன்படுத்துபவர்களில் இவ்விரு பிரிவினரே அதிக ஆபத்தை எதிர்நோக்குவதாக நம்பப்படுகிறது.
குடியிருப்பாளர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகள் மூலம் சாலைப் பாதுகாப் பின் அவசியம் குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது.
சாலைப் பாதுகாப்பு தொடர்பான பயிற்சியை குழந்தைகள் நடத்திக் காட்டும் விதத்தை ரசிக்கிறார் பிரதமர் லீ சியன் லூங். பாலர் பள்ளி மாணவர்களான சேலன் கூ, ரேவந்த் மணிகண்டன் ஆகிய இருவரும் ஆறு வயது சிறுவர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்