ஹைதராபாத் டிஆர்எஸ் கட்சி அலுவலகத்தில் தங்களது கட்சியின் வெற்றியை ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்கின்றனர் கட்சித் தொண்டர் கள். தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சி ஆட்சியில் இருக்கிறது. முதல்வராக சந்திரசேகர் ராவ் உள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் டிஆர்எஸ் கட்சி 119 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் 90 இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் 2வது முறையாக ஆட்சி அமைக்கும் சூழல் நிலவியது. இந்நிலையில், பாஜக வெற்றிபெற்றால் மட்டுமே வாக்கு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை எனக் கொச்சைப்படுத்தினார்கள்.
அவர்கள் வெற்றிபெற்றால் மட்டும் இயந்திரங்கள் எல்லாம் சரியாக வேலை செய்கிறது என்று அர்த்தமா? என்று கேள்வி எழுப்பியுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இது வெற்றிகரமான தோல்வி; மோடி அலை என்றுமே ஓயாது என்று கூறியுள்ளார். ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியான சூழலில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலையில் வருவதை அடுத்து புதுச்சேரி மாநில காங்கிரசார் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் கொடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக ஆணவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். படம்: ஏஎஃப்பி