இர்ஷாத் முஹம்மது
புத்தகங்களை வாசிப்பதற்கும் இர வல் வாங்குவதற்கும் மட்டுமல்லா மல் திறன்களை வளர்க்கும் தள மாகவும் நூலகங்கள் செயல்படு கின்றன என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தெரி வித்தார்.
தேசிய நூலக வாரிய திறன் பேசிச் செயலி உட்பட பல்வேறு மின்வளங்களும் ஏற்படுத்தப்பட்டு மின்னியல் காலத்திற்கேற்ப நூல கங்கள் மேம்பாடு கண்டு வருகின் றன என்றும் அமைச்சர் கூறினார். "மின் வளங்களைக் கொண்டு படிக்கும் பழக்கத்தையும் புழக்கத் தையும் மேம்படுத்த முடியும்," என் றார் அவர்.
விவோசிட்டி கடைத்தொகுதி யின் மூன்றாம் தளத்தில் சுமார் 3,000 சதுர மீட்டர் பரப்பளவில் 'லைப்ரரி@ஹார்பர்ஃபிரன்ட்' நூல கம் அமைக்கப்பட்டுள்ளது. மின் னியல் வசதிகளை பலவகையிலும் இணைத்து வாசகர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் புதிய நவீன நூலகத்தை நேற்று அமைச் சர் எஸ் ஈஸ்வரன் அதிகாரபூர்வ மாகத் திறந்துவைத்தார்.
'லைப்ரரி@ஹார்பர்ஃபிரன்ட்' நூலகம் நேற்று திறக்கப்பட்டபோது ஏராளமானோர் அங்கு வந்திருந்தனர். அவர்களில் சிலரை தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் சந்தித்து ஊக்கப்படுத்தினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்