கோல்கத்தா: நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் ஐஏஎஸ் பெண் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேற்குவங்கத்தில் வேட்பாளர் மீது தாக்குதல் நடத் தப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள 12 மாநிலங்களில் 90க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. அச்சமயம் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்ததை அடுத்து, பாதுகாப்புப் படையினர் துரிதகதியில் செயல் பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஒடிசாவில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நேற்று அங்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. புல்பானி பகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார் அதிகாரி சஞ்சுக்தா. அப்போது சாலையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒரு பெட்டி தென்படவே, காரில் இருந்து இறங்கிச் சென்று அதைச் சோதனையிட முற்பட்டார் சஞ்சுக்தா. இச்சமயம் அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் அவரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடினர்.
மேற்கு வங்கத்தில் உள்ள மூன்று தொகுதிகளுக்கு மட்டும் நேற்று தேர்தல் நடைபெற்றது. ராய் காஞ்ச் பகுதியில், வாக்குப்பதிவை பார்வையிடச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மீது கல்வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக வும் கூறப்படுகிறது. வேட்பாளரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. எனினும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
டார்ஜிலிங் தொகுதியிலும் வன்முறை வெடித்தது. சில இடங் களில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.
புதுவையில் ஏழு வாக்குச்சாவடி களை முழுக்க முழுக்க பெண்களே நிர்வகித்தனர்.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது தலைதூக்கிய வன்முறை
19 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Apr 2019 08:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
நாடாளுமன்ற சிறப்பு விசாரணைக் குழுவிடம் பொய் சொன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் மீது குற்றச்சாட்டு
மார்ச் 18, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மார்ச் 17, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மூன்று தலைமுறையினரையும் இணைக்கும் இசை
செல்லப்பிராணிகளைக் கனவுலகிற்கு அழைத்துச் செல்லும் பெட்எக்ஸ்போ 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!