சிவகார்த்திகேயனும் மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பகத் பாசில் மலையாள சினிமா உலகின் பரபரப்பான நடிகர்களில் ஒருவர். பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும், அவர் நேரடித் தமிழ்ப் படத்தில் நடித்ததில்லை. இந்நிலையில், முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து தமிழ் படத்தில் நடிக்க உள்ளாராம். சிவகார்த்திகேயன் இப்போது 'ரெமோ' படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் முடிந்த பிறகு மோகன்ராஜா இயக்கும் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில்தான் பகத் பாசில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கிறார். இதில் அவர் வில்லன் வேடத்தில் நடிக்கிறாரா? அல்லது வேறு வேடத்தில் நடிக்கிறாரா? என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. இப்படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.