'என்னை அறிந்தால்' படத்தை அடுத்து 'நாயகி' படத்தில் கதையின் நாயகியாக இரு பாத்திரங்களில் நடித்துள்ளார் திரிஷா. அதிரடியும் நகைச்சுவையும் கலந்த கதையைக் கொண்ட 'நாயகி' படத்தில் நடித்து வருகிறார் திரிஷா. அந்தப் படம் தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இதையடுத்து தனுஷ் படமான 'கொடி' படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் அரசியல்வாதியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தபோதும், இப்போது கிடைத்த தகவலின்படி, திரிஷா அரசியல்வாதியாக நடிக்கவில்லையாம். அரசியல்வாதியாக நடிக்கும் தனுசுக்கு இணையாக நடிக்கிறாராம்.
மேலும் இந்த 'கொடி', திரிஷாவை இதுவரையில்லாத அளவுக்கு மாறுபட்ட கோணத்தில் காண்பிக்கும் படமாம். அப்படி சத்தான வேடத்தில் நடித்திருக்கிறாராம். குறிப்பாக, மன்னன் படத்தில் நடித்த விஜயசாந்தி எந்த அளவுக்குக் கம்பீரமாக நடித்தாரோ அதே பாணியில் திரிஷாவும் நடித்திருக்கிறாராம்.