காணாமல் போன கதாநாயகி: பதறிப்போன படக்குழுவினர்

"உலகிலேயே எந்த மொழிக்கும் இல்லாத பெருமைகள் செம்மொழியாம் தமிழுக்கு உண்டு. வார்த்தை உச்ச ரிப்பு, இலக்கணக் கட்டு என்று தமிழுக்குரிய தனித்தன்மைகளை வேறெந்த மொழியோடும் ஒப்பீடு செய்து பார்க்க முடியாது. அத்தகைய மொழிக்கு பெருமை சேர்க்கும் படமாக 'சொல்' இருக்கும்," என்கிறார் நடிக ரும் இயக்குநருமான பாவண்ணன். தலைப்பே கதையைச் சொல்லி விடுகிறதே?

"உண்மைதான். ஆனால், இதை விட பொருத்தமான தலைப்பு வேறு கிடைக்கவில்லை. கதைக் கருவை ஒரு தலைப்பு சொன்னால் அது படத்துக்கு கூடுதல் வலிமைதான் என்று நினைக்கிறேன். காதலும் இல்லை கல்யாணமும் இல்லை. ஆனால் கணவன் - மனைவி என்கிற வித்தியாசமான கதைக்களம். காதலே இல்லாமல் இருவர் சேர்ந்து வாழமுடி யுமா என இதில் அலசி இருக்கிறேன்.

"கண்டதும் காதல் என்பதுதான் நம் தமிழ் சினிமாவின் வழக்கமான கதைக் கரு. எனினும் அதைக் கடந்ததுதான் சராசரி தமிழனின் வாழ்க்கை. கை தொடாமல், கால் படாமல் மெய்ப்பட வாழும் வாழ்க் கையின் பக்கங்களை என் படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனும் நிச்சயமாகப் புரட்டிப் பார்ப்பான். "வி.சேகர் இயக்கிய படங்களில் வேலை பார்த்தேன். தயாரிப்பாளர்கள் விஜயா, சரஸ்வதி ஆகியோர் என்னை இந்தப் படம் மூலமாக கதாநாயக னாகவும் இயக்குநராகவும் அடையாளப் படுத்துகிறார்கள்."

'சொல்' படத்தின் படப்பிடிப்பில் பாவண்ணன், அஞ்சனாராஜ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!