'இறைவி' படத்தில் படத்தயாரிப்பாளர்களைத் தவறாக சித்திரித்ததோடு தமிழர்களின் மனம் புண்படுமாறு வசனங்கள் அமைத்ததற்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிற்கு படம் இயக்கத் தடைவிதிக்தத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு தலைமையில் குழு ஒன்று கூடியிருக்கிறது. 'இறைவி' படத்தின் ஒரு காட்சியில் "தமிழ் தமிழ் எனப் பேசறவங்களுக்குச் சரியான செருப்படி கொடுத்தீங்க," என்ற ஒரு வசனம் தமிழ் இன உணர்வாளர்களை மிகவும் கோபப்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழ்ப் படம் எடுத்துக்கொண்டு தமிழர்களையே கேவலப்படுத்துவதா என்று படம் பார்த்தவர்கள் ஆவேசமாகக் குரல் கொடுக்க ஆரம்பித் துள்ளார்கள்.
இதற்கிடையில் தயாரிப்பாளர்களையும் மிகவும் கேவலப்படுத்தி படம் எடுத்திருப்பதால் அவருக்கு தயாரிப்பாளர்களிடையேயும் பெரிய எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தயாரிப்பாளர்களில் ஒருவரான சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் "உங்களின் 'இறைவி' படம் பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புக்கு ஒரு பூங்கொத்து. "சிறிய வயதிலேயே தயாரிப்பாளர் ஒருவர் மனது வைத்ததால் இயக்குநராகும் பாக்கியம் பெற்றவர் நீங்கள்.
ஆனால் இதற்கெல்லாம் காரணமான தயாரிப்பாளர் என்கிற ஓர் இனத்தை விஜி முருகன் (எஸ்.ஜே.சூர்யா) என்பவரின் கதாபாத்திரத்தின் மூலம் கேவலப்படுத்தி யிருக்கிறீர்கள். "படத்தில் தயாரிப்பாளர் ஒருவர் இதற்கு முன்னால் நான் என்ன பண்ணிக்கிட்டிருந் தேன்னு தெரியுமான்னு கேட்கும் வசனத்தில் ஆரம்பித்து அவரின் கடைசி நிமிடம் வரை தயாரிப்பாளர் என்பவன் படுமோசமானவன், எந்த எல்லைக்கும் போவான், அவனால் ஒரு இயக்குநரோ படைப்பாளியோ அவன் குடும்பமோ சாதாரணமாக நசுக்கப்படும் என்று அடுக்கடுக்காக சேற்றை வாரியிறைத்திருக்கிறீர்கள்.