"நிவாஸ் கே.பிரசன்னா, ஜஸ்டின் பிரபாகரன் இவர்கள் இருவரும் இசை அமைப்பாளராக எனக்கு மிகவும் பிடித்தவர்கள். அடுத்து 'உறியடி' படம் இயக்கிய விஜய் குமார். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்கிறார் விஜய்சேதுபதி. "தமிழ்ச் சினிமா, எனக்கு நிறையக் கொடுத் திருக்கிறது. நான் சினிமாவுக்கு நிறைய நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். நான் காசு, பணத்தைச் சொல்லவில்லை. பலரின் அன்பைக் கொடுத்தது, நிறைய தைரியம் கொடுத்தது, வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்தது, நிறைய சவால்களைக் கொடுத்து என்னை அவற்றை எதிர்கொள்ள வைத்தது என சினிமா எனக்கு நிறைய செய்துள்ளது.
"முன்பு காசு இல்லாமல் இருந்த நாட்களை விட, இப்போது நான் வாழும் வாழ்க்கை எனக்கு சிரமமானதாக உள்ளது. நிறைய ஏமாற் றங்கள், நிறைய துரோகங்கள், பொய்யான பேச்சுக்கள் என இப்போதுதான் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை அதிகமாகப் பார்க் கிறேன். ஆனால் அனைத்தையும் எப்படியோ சமாளிக்கிறேன்," என்றார் விஜய் சேதுபதி.