நடிகை அஞ்சலியுடன் தாம் நெருங்கிப் பழகு வது உண்மைதான் என்று மனம் திறந்துள்ளார் நடிகர் ஜெய். அதேசமயம் இருவருக்குமான திருமணம் எப்போது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லையாம். ஜெய்யும் நடிகை அஞ்சலியும் 'எங்கேயும் எப்போதும்' என்ற படத்தில் ஜோடியாக நடித் தார்கள். இப்போது 'பலூன்' என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். 'எங்கேயும் எப்போதும்' படத்தில் நடித்தபோது, இருவ ருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகப் பரவலாக பேசப்பட்டது. இதை இருவருமே மறுக்கவில்லை.
இதையடுத்து ஜெய்யும் அஞ்சலியும் ஜோடி யாக வெளியில் சுற்றுவதாகவும் இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் அதிகரித்த நிலை யில், திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அண்மைய பேட்டியில் அவர் வெளிப்படையாகப் பல விஷயங்களைக் கூறி யுள்ளார் ஜெய். "நானும், அஞ்சலியும் நெருங்கிப் பழகுவது உண்மைதான். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பும் புரிதலும் இருந்து வருகிறது. 'எங்கேயும் எப்போதும்' படப்பிடிப்பின்போதே இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண் டோம். எனக்கு அஞ்சலியைப் பிடித்து இருக் கிறது. அஞ்சலிக்கு என்னைப் பிடித்து இருக்கிறது.