பார்வையற்ற பெண்ணிற்கு பாடும் வாய்ப்பு

தமிழ் திரையுலகில் பல புதிய கலைஞர்கள் அறிமுகமாகி தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் திறமையை வெளிக்காட்டும் பலரும் தங்களது அடுத்த அடியை தமிழ் திரையுலகில் பதிக்கிறார்கள். அந்த வரிசையில் சமூக வலைத்தளங்களில் தனது அழகான குரலை வெளிப்படுத்தியிருந்த ஜோதி என்ற பார்வையற்ற இளம் பாடகிக்கு ஜி.வி.பிரகாஷ் தனது இசையில் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார். தனது ஃபேஸ்புக் இணையத்தளத்தில் தன் குரலில் பாடிய பாடல்களை வெளியிட்டிருந்தார். இதைப் பார்த்து வியந்துபோன ஜி.வி.பிரகாஷ், தன்னுடைய 'அடங்காதே' படத்தில் ஒரு பாடல் பாட ஜோதிக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். இந்தப் பாடல் பதிவு அண்மையில் நடைபெற்று முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் பாடல் படத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்றும் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!