செல்வராகவனின் " நெஞ்சம் மறப்பதில்லை"

'இரண்டாம் உலகம்' படத்திற்குப் பிறகு எந்தப் படமும் இயக்க வில்லை செல்வராகவன். இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது அவர் இயக்கி இருக்கும் புதிய படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. இப்படத்தின் கதாநாயகன் எஸ்.ஜே.சூர்யா. ரெஜினா, நந்திதா என இரண்டு கதாநாயகிகள் இதில் இருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் உரு வாகி உள்ள படம் என்பதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. திகில் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் ரெஜினா பேய் கதாபாத்திரத்தில் தோன்று கிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த கிருஷ்ணா, இயக்குநர் செல்வராகவன் என்ற இக் கூட்டணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது இப்படம் மூலம் இணைந்திருக்கிறது. அண்மையில் வெளியான இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளும் பாடல்களும் ரசிகர் கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதாகத் தெரிகிறது. மேலும் இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் இதற்கு, 'யு/ஏ' என்ற சான்றிதழைக் கொடுத்துள்ளனர்.

'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் இடம்பெறும் காட்சியில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!