கர்வத்துடன் செயல்படுவதால் ஒருவருக்கு ஏற்படக்கூடிய அனு பவங்களை விவரிக்கும் வகையில் உருவாகி வருகிறது 'சீமத்துரை'. அறிமுக இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றையும் எழுதி உள்ளார். நாயகனாக கீதனும் நாயகியாக வர்ஷாவும் நடித்துள்ளனர். சுஜய் கிருஷ்ணா தயாரிக்கும் இப்படத் துக்கு ஜோஸ் பிராங்க்ளின் இசையமைத்துள்ளார். "ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஏதேனும் திருப்பு முனை இருக்கவே செய்யும். சில எதிர்பாராத சந்தர்ப்பங்கள், சூழ் நிலைகள் காரணமாக அந்தத் திருப்புமுனை ஏற்படலாம். "இவ்வாறு ஏற்படும் திருப்பு முனை நல்லதோ கெட்டதோ... அதிலிருந்து எதிர்கால வாழ்க் கைக்கு ஒருவன் எப்படி தயார் படுத்திக் கொள்கிறான் என்பது முக்கியம். ஏனெனில் அதுதான் அவனது வாழ்வின் வெற்றி, தோல்விகளைத் தீர்மானிப்பதாக இருக்கும்.
"அப்படிப்பட்ட திருப்பு முனையை எதிர்கொள்ளும் ஒரு வன் தன் கர்வத்தால் ஏற்படக் கூடிய விளைவுகளை எப்படி எதிர்கொண்டான் என்பதே கதை. கிராமப் பின்னணியில் இந்தக் கதை பயணிக்கும்," என்கிறார் சந்தோஷ் தியாகராஜன்.
கீதன், வர்ஷா.