கதாநாயகிகளின் கோடை சுற்றுலா

கோடை காலத்து தகிப்பைச் சமாளிக்க முடியாமல் கோடம்பாக்கத்து கிளிகள் வெவ்வேறு திசைகளில் பறந்துவிட்டன.

ராய் லட்சுமியைப் பொறுத்தவரை ஒவ்வோர் ஆண்டும் ஏதேனும் வெளிநாட்டுக்குச் சென்று திரும்புகிறார்.

இம்முறை தாய்லாந்தில் உள்ள இரண்டு தீவுகளைச் சுற்றிப் பார்த்தாராம். அங்கே நாளொரு நீச்சல் உடையும் பொழுதொரு கடற்கரையுமாக சுற்றித் திரிந்து புகைப்படம் எடுத்துள்ளார். ஊர் திரும்பிய பிறகு ஒவ்வொரு படமாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களைச் சூடேற்றி வருகிறார் ராய் லட்சுமி.

நடிகை திரிஷா குறுகிய கால பயணமாக பாரிஸ் நகருக்குச் சென்று திரும்பினாராம். ‘காஞ்சனா-3’க்குப் பிறகு சற்றே ஓய்வு கிடைத்ததைப் பயன்படுத்தி மும்பையில் கோடைக் காலத்தைக் கழித்திருக்கிறார் வேதிகா.

அவரது வீடும் அங்குதான் உள்ளது. எனினும் நடிகையான பிறகு பல இடங்களுக்குச் செல்ல முடியவில்லையாம். இந்நிலையில் மும்பையின் பிரபல ஏரிப்பகுதிக்குச் சென்று ஆசை தீர படகு சவாரி மேற்கொண்ட வகையில் இந்தக் கோடைக்காலம் தன் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகி விட்டது என்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!