நடிகை நிக்கி கல்ராணி கர்நாடக மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். பெங்களூரில் படிப்பை முடித்த அவரை மலையாள சினிமாதான் முதலில் வரவேற்றது.
கடந்த 2014ஆம் ஆண்டு மலையாளப் படம் மூலம் திரையுலகில் கால் பதித்தார் நிக்கி.
நடித்த முதல் படமே வெற்றி பெற்றதால், அடுத்தடுத்து மலையாளப் படங்களில் ஒப்பந்தமான அவரைக் கன்னட திரையுலகமும் வாரி அணைத்தது. தொடர்ந்து மலையாளம், கன்னடம் எனப் பல படங்களில் நடித்தார்.
‘டார்லிங்’ என்ற திகில் படத்தில் நிஷா கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேர்ந்தார் நிக்கி.
இந்தப் படமும் வரவேற்பைப் பெறத் தமிழில் தொடர்ந்து ‘யாகாவாராயினும் நாகாக்க’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘கலகலப்பு 2’ என்று வித்தியாசமான படங்களில் நடித்துப் பிரபலமானார்.
தற்போது மலையாளப் படம் ஒன்றில் நடித்து முடித்துள்ள நிக்கி, தமிழில் ‘ராஜவம்சம்’ என்ற படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையே, நிக்கி கல்ராணி காதலில் விழுந்துள்ளதாகவும் காதலரை ரகசியமாக சந்தித்து வருவதாகவும் கிசுகிசுக்கள் வலம் வந்தன.
இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த நிக்கி கல்ராணி அதனை உறுதிப்படுத்தி உள்ளார்.
“எனக்கும் காதல் அனுபவம் உள்ளது. நான் சென்னையைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்து வருகிறேன். “ஆனால் அவர் யார் என்று நான் இப்போது சொல்லமாட்டேன்.
“மூன்று வருடங்களுக்குப் பிறகு அவரை தான் திருமணம் செய்து கொள்வேன். அப்போது அதிகாரபூர்வ மாக அறிவிக்கிறேன்,” என்று கூறி
உள்ளார்.
சென்னையைச் சேர்ந்த அந்த நபர் யாராக இருக்கும் என்ற கேள்வி சமூக ஊடகங்களில் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மேலும் அவர் திரைத்துறையைச் சேர்ந்தவராக இருக்குமா அல்லது மற்ற துறையில் வேலை பார்ப்பவராக இருக்குமா என்று குழம்பி வருகின்றனர்.