சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'டாக்டர்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த பிரபலங்கள் கண்ணில் நீர் வரும் அளவிற்கு சிரித்தேன் என்று பதிவிட்டு பாராட்டி வருகிறார்கள்.
நேற்று முன்தினம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'டாக்டர்' திரைப்படம், நயன்தாராவை வைத்து 'கோலமாவு கோகிலா' வெற்றிப் படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில், தெலுங்குத் திரையுலகில் அறிமுகமாகி, அடுத்தடுத்து தமிழ்த் திரைப்பட வாய்ப்புகளை
கைப்பற்றி வரும் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
மேலும் யோகிபாபு, வினய், 'பிக்பாஸ்' அர்ச்சனா, 'குக் வித் கோமாளி' புகழ் தீபா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்ஷனும் தயாரித்துள்ளது.
படத்தில் நகைச்சுவை, சண்டை, பாசம் இப்படி எதற்கும் பஞ்சமில்லை என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
படத்தில் 'ராக் ஸ்டார்' அனிருத்தின் இசை பிரமாதமாக இருக்கிறது என அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்தப் படத்தில் இருந்து வெளியான பாடல்களுக்கு ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் இந்தப் படம்
தமிழகத்தில் மட்டும் ஒரே நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அதாவது 'டாக்டர்' திரைப்படம் வெளியான முதல் நாளே தமிழகம் முழுவதும் ரூ.8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 50 விழுக்காட்டு
பார்வையாளர்களுடன் இவ்வளவு வசூல் செய்துள்ளது சாதனையாகவே பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
'டாக்டர்' திரைப்படத்திற்கு கோலிவுட் நட்சத்திரங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக மற்ற திரைப்படங்
களுக்கு வாழ்த்துகள் சொல்லாத சூர்யாவும் 'டாக்டர்' படத்திற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்.
இயக்குநர் ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் 'டாக்டர்' திரைப்படம் பற்றி பதிவிட்டுள்ளார். அதில் "இந்த கொரோனா காலத்தில் டாக்டர் திரைப்படம் சிறந்த சிரிப்பு மருந்தாக இருக்கிறது. அனைவரையும் மகிழ்வித்த இயக்குநர் நெல்சனுக்கு வாழ்த்துகள்.
"குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படத்தைக் கொடுத்த
சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி. திரை
யரங்க அனுபவம் மாறியுள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது," என்று பதிவிட்டிருந்தார்.
இந்த டுவிட்டிற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், "முதல் முறையாக இயக்குநர் ஷங்கர் சாரிடம் இருந்து வந்த வாழ்த்துகள் 'டாக்டர்' திரைப்படத்தை இன்னும் மறக்கமுடியாத ஒன்றாக மாற்றி இருக்கிறது. அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் ஒரு படம்
நெல்சன் இயக்க உள்ளதாகவும் அதனை 'லைக்கா' நிறுவனம்
தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
'டாக்டர்' திரைப்பட வெளியீட்டில் இருந்த சிக்கலை கடைசி
நேரத்தில் சிவகார்த்திகேயன் தனது சொந்த பணத்தின் மூலம் தீர்த்து வைத்தார். இதனால் சிவகார்த்திகேயன் மீண்டும் கடனாளி ஆகி உள்ளார் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்தப் படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் நல்லவிதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் 'டாக்டர்' படத்தில் வரும் ஒரு காட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
விளையாட்டில் தோல்வி அடையும் நபருக்கு பெண்கள் இரவில் அணியும் உடையை அணிவித்து, தலையில் பூ வைத்து, பெண் போன்று மாற்றுவார்கள். தோல்வி அடைந்ததால் அப்படி ஒரு வேஷம். அந்த
காட்சிதான் பெண்கள் அமைப்பினரை கோபம் அடையச் செய்துள்ளது.
"பெண்கள் என்றால் அவ்வளவு கேவலமாக போச்சா? போட்டியில் தோற்றவரை அசிங்கப்படுத்த பெண் வேடம்தான் போடவேண்டுமா? அந்தக் காட்சியை உடனடியாக நீக்க வேண்டும்," என்று கோரி பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக நெல்சன் திலீப்
குமாரும் சிவகார்த்திகேயனும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்கிறது கோலிவுட்.