சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படம்
உலகம் முழுவதும் அண்மையில்
வெளியானதைத் தொடர்ந்து திரை
யரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் வெளியான 'டாக்டர்' விஜய்யின்
'மாஸ்டர்' படத்தின் வசூலைத் தாண்டி, வசூல் வேட்டை நடத்தி வருவதால் 'டாக்டர்' படக்குழு மகிழ்ச்சியில்
இருக்கிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம்
'டாக்டர்'. இந்தப் படம் கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப்
படத்தில் வினய், பிரியங்கா, யோகி பாபு
உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
உடல் உறுப்பு கடத்தலை நகைச்
சுவைக் கலந்த சண்டைப் படமாக கொடுத்துள்ளார் இயக்குநர்
நெல்சன் திலீப்குமார்.
படத்தில் சிவகார்த்திகேயன் அதிகமாகப் பேசவில்லை
என்றாலும் நடிப்பினால் ரசிகர்
களைக் கவர்ந்திருக்கிறார்.
"இந்தப் படத்தில் வித்தியாசமான சிவகார்த்திகேயனைப் பார்த்தோம்," என்று பலரும் கொண்டாடி வருகிறார்கள்.
இந்தப் படம் வசூலிலும்
பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. அதன்படி படம் வெளியான முதல் மூன்று நாட்களில் 25 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து முதல் வாரத்தில் மட்டும் 'டாக்டர்' திரைப்படம் தமிழகத்தில் 50 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகம் மட்டுமின்றி
அமெரிக்காவிலும் 'டாக்டர்' படம் வசூலில் பட்டையைக் கிளப்பி சாதனை படைத்து வருகிறது.
அமெரிக்காவில் விஜய்யின் 'மாஸ்டர்' படம் 439 ஆயிரம் டாலர்களை வசூலித்து சாதனை படைத்திருந்தது. அதுவே
அமெரிக்காவில் தமிழ்ப் படம் வசூலித்த ஆக அதிகமான தொகையாக இருந்து
வந்தது. ஆனால், சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படம் தற்பொழுது 440 ஆயிரம் டாலர்களை வசூல் செய்து விஜய்யின் சாதனையை முறியடித்து இருக்கிறது.
அடுத்ததாக தீபாவளிக்கு ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படம் வெளியாக உள்ளதால் 'டாக்டர்' படத்தின் சாதனையை 'அண்ணாத்த' படம் முறியடிக்குமா என்ற கேள்வி
எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வார நாட்
களிலும் மக்கள் கூட்டம் குறையாத இந்தப் படத்திற்கு விமர்சகர்கள் மத்தியிலும் நேர்மறையான கருத்துகளே வந்த வண்ணம் உள்ளது.
மேலும் தசரா விடுமுறை, வார இறுதி விடுமுறை,
மற்றும் போட்டிக்குப் பெரிய படங்கள் எதுவும் இல்லாதகாரணங்களால் 'டாக்டர்' படம் வசூலைக் குவித்து
வருகிறது.
தொடர்ந்து 3வது வாரமாக 'டாக்டர்' படத்திற்கு மக்கள் கூட்டம் அலைமோதி வருவதால், தொற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட திரையரங்கு உரிமையாளர்களுக்கு இது ஒரு பெரிய நிவாரணம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பினால் திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கை மட்டுமே
அனுமதிக்கப்பட்டதால், சற்று தோய்வடைந்த திரைத்துறையை
சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படம் தூக்கி நிறுத்தி உள்ளது.
இதனால் பல தயாரிப்பாளர்கள் தைரியமாக தங்கள் படங்களைத் திரையரங்குகளில் வெளியிட ஆவலுடன் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
தமிழகம் மட்டுமல்லாது 'வருண் டாக்டர்' என்ற பெயரில் தெலுங்கிலும் மறுபதிப்பு செய்து வெளி
யிடப்பட்டது.
தசரா விடுமுறையில் வெளியான சில தெலுங்கு நேரடி படங்
களுக்கு மத்தியில் டோலிவுட்டிலும் இந்தப் படம் வசூலைக் குவித்து வருகிறது.
இயக்குநர் சுந்தர்.சி.யின்
'அரண்மனை 3' படம் கடந்த
வியாழக்கிழமை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இருந்தாலும் 'டாக்டர்' படத்தை மிஞ்சும் அளவுக்கு 'அரண்மனை 3' படம் மக்கள் கூட்டத்தை ஈர்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
கொரோனாவால் பலமுறை தள்ளிப்போய் பெரும் எதிர்பார்ப்புக்குப் பின்னர் வெளியாகிய 'டாக்டர்' படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.