எஸ்.பி.பி. சரண் வெளியிட்ட புகைப்படத்தால் பரபரப்பு

எஸ்.பி.பி. சரண் வெளியிட்ட புகைப்படத்தால் பரபரப்பு

1 mins read
1d524ad6-7f01-4521-ae86-f16d509428c1
இணையத்தொடர் ஒன்றில் சோனியா அகர்வாலுடன் சரண். -

காலஞ்­சென்ற பாட­கர் எஸ்.பி.பால­சுப்­பி­ர­ம­ணி­யத்­தின் மகன் எஸ்.பி. பி.சரண் விரை­வில் திரு­ம­ணம் செய்­து­கொள்ள இருப்­ப­தாக வெளி­யான தக­வல் கோடம்­பாக்க வட்டா­ரங்­களில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­படுத்­தி­யது.

சர­ணும் நடிகை சோனியா அகர்­வா­லும் ஜோடி­யாக நிற்­கும் புகைப்­படம் ஒன்று வெளி­யா­ன­து­தான் இதற்­குக் கார­ணம்.

மேலும், "புதி­தாக ஒன்று உரு­வா­கிறது," என சரண் தமது பதி­வில் குறிப்­பிட்­டதை அடுத்து, சமூக வலைத்­த­ளங்­கள் மூலம் சர­ணுக்­கும் சோனி­யா­வுக்­கும் வாழ்த்­து­கள் குவிந்­தன.

இதை­ய­டுத்து மற்­றொரு புகைப்­படத்தை வெளி­யிட்­டார் சரண். அதில், சந்­தோஷ் பாபு­வும் நடிகை அஞ்­ச­லி­யும் உடன் இருந்­த­னர்.

மேலும், இணை­யத் தொடர், ஃபிலிம் புரொ­டெக்­‌ஷன் என்­றும் அவர் குறிப்­பிட்­டதை அடுத்து, ரசிகர்­க­ளின் ஆரூ­டங்­களும் எதிர்­பார்ப்­பும் முடி­வுக்கு வந்­தன.

தாம் நடிக்க உள்ள புதிய இணை­யத்­தொ­டர் குறித்து கூடுதல் தக­வல்­களை விரை­வில் பகிர்­வ­தாக தெரி­வித்­துள்­ளார் சரண்.