காலஞ்சென்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி. பி.சரண் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வெளியான தகவல் கோடம்பாக்க வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சரணும் நடிகை சோனியா அகர்வாலும் ஜோடியாக நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியானதுதான் இதற்குக் காரணம்.
மேலும், "புதிதாக ஒன்று உருவாகிறது," என சரண் தமது பதிவில் குறிப்பிட்டதை அடுத்து, சமூக வலைத்தளங்கள் மூலம் சரணுக்கும் சோனியாவுக்கும் வாழ்த்துகள் குவிந்தன.
இதையடுத்து மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டார் சரண். அதில், சந்தோஷ் பாபுவும் நடிகை அஞ்சலியும் உடன் இருந்தனர்.
மேலும், இணையத் தொடர், ஃபிலிம் புரொடெக்ஷன் என்றும் அவர் குறிப்பிட்டதை அடுத்து, ரசிகர்களின் ஆரூடங்களும் எதிர்பார்ப்பும் முடிவுக்கு வந்தன.
தாம் நடிக்க உள்ள புதிய இணையத்தொடர் குறித்து கூடுதல் தகவல்களை விரைவில் பகிர்வதாக தெரிவித்துள்ளார் சரண்.