ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ், சையிப் அலிகான் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் 'ஆதி
புருஷ்'. இந்தி, தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படம் வால்மீகி எழுதிய ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது. இப்படம் 2023ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதிக்கட்ட பணிகள் முடிவடையாததால் மீண்டும் வெளியீட்டு தேதியை அடுத்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
படம் முடிவடைந்துவிட்டது என்று முன்னோட்டக் காட்சியை வெளியிட்டனர். முன்னோட்டக் காட்சியைப் பார்த்தவர்கள் பிரபாஸிடம், "இது உங்களுடைய படம் போலவே இல்லை. சிறுவர்கள் பார்க்கும் கேலிச்சித்திரக் கதைபோல் இருக்கிறது. இந்தக் கதையில் நீங்கள் நடித்திருக்கக்
கூடாது," என்று கூறியதாலும் பிரபாஸுக்கும் பல காட்சிகள் திருப்தி இல்லாததாலும் மீண்டும் படத்தின் பல காட்சிகள் எடுக்கப்படுகின்றன என்று கூறப்பட்டது.
ஆனால், இதைப் படக்
குழுவினர் மறுத்து, படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துவிட்டது. இறுதிக்கட்ட வேலைகள் மட்டுமே மீதம் உள்ளன. அதைத்தான் செய்துகொண்டு இருக்கிறோம். அதனால்தான் பட வெளியீடு தள்ளிப்போய் இருக்கிறது என்று அறிவித்துள்ளனர்.