விஜய் என்னுடன் பேசுவதற்கு முன்பு அவரது அப்பா, அம்மாவிடம் பேசவேண்டும். எனது இந்த விருப்பத்தை நிறைவேற்றினால் நான் விஜய்யுடன் பேசத் தயாராக உள்ளேன் எனக் கூறியுள்ளார் நடிகர் நெப்போலியன்.
‘போக்கிரி’ படத்தில் நடித்தபோது விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக இன்னும் அவருடன் பேசாமல்தான் உள்ளேன். அந்த அளவுக்கு எங்களுக்குள் பகை உணர்வு வேரோடி உள்ளது எனக் கூறியுள்ளார் அவர்.
அண்மைக்காலமாக அமெ ரிக்காவில் வசித்துவரும் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், “விஜய்யுடன் பேச்சுவார்த்தை முறிந்துபோனதைத் தொடர்ந்து, அவர் நடித்துள்ள படங்களைக்கூட நான் பார்ப்பதில்லை.
“எனினும், மீண்டும் விஜய்யுடன் பேசவும் நடிக்கவும் நான் தயாராக உள்ளேன். ஆனால், அவர் என்னுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கிறாரா என்பதை அவரிடம் தான் கேட்கவேண்டும்.
“விஜய் என்னிடம் பேசுவதைவிட முதலில் அவரது பெற்றோரிடம் பேசவேண்டும். அவர் பெற்றோரிடம் பேசுவதில்லை என்ற தகவல் அமெரிக்கா வரை பரவியுள்ளது. அதன்பின்னர் நாங்கள் இருவரும் பேசிக்கொள்வது பற்றி பார்க்கலாம்,” என்று நெப் போலியன் கூறியுள்ள காணொளிப் பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.