ஜனார்த்தனன் கிருஷ்ணசாமி
கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டம் நடப்பில் இருந்தபோதும் தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளின்போதும் உணவுக் கடைகள் உட்பட பல வர்த்தகங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகளால் லிட்டில் இந்தியா வட்டாரத்திலுள்ள வர்த்தகம் சராசரியாக 60 விழுக்காடு குறைந்திருப்பதாக லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) தலைவர் சி. சங்கரநாதன் தெரிவித்தார்.
"கடந்தாண்டு அரசாங்கத்துடன் சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழிற்சபை இணைந்து தந்த ஆதரவு காரணமாக லிட்டில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான கடைகள் மின்னிலக்க முறையை கடைப்பிடித்துள்ளன," என்று அவர் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
ஆயினும், கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டு ஊழியர்
பற்றாக்குறை வெகுவாக அதி
கரித்துவிட்டதை அவர் சுட்டினார்.
இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் அப்போதைய மனிதவள இரண்டாம் அமைச்சர் டான் சீ லேங்கை லிஷா அமைப்பினர் இவ்வாண்டு பிப்ரவரி சந்தித்தாகக் திரு சங்கரநாதன் கூறினார்.
"லிட்டில் இந்தியா கடைக் காரர்களிடையே நிலவும் அக்கறைகளை இந்தச் சந்திப்பின்போது முன்வைத்தோம்," என்றும் அவர் தெரிவித்தார்.
விநியோகம், மின்னிலக்கம் சார்ந்த வியாபார முறையை நடைமுறைப்படுத்த தளவாடம் உள்ளிட்ட சில வர்த்தகங்கள் கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டு தயாராக உள்ளதாக தெரி விக்கப்பட்டது.
கடைகளுக்கு விதிக்கப்
பட்டுள்ள கட்டுப்பாடுகளாலும் கொரோனா கிருமிப் பரவல் குறித்த பீதியாலும் கடந்த இரண்டு வாரங்களில் தமது வர்த்தகம் 50 விழுக்காடு குறைந்திருப்பதாக குடாச்சாரி காய்கறி உரிமையாளர் சீதாதேவி ரமேஷ், 42, தெரிவித்தார்.
"காய்கறிகளை வாங்க வாடிக்கையாளர்கள் நேரில் வர விரும்புவதை நான் பார்க்கிறேன். எனவே, தற்போது மின்னிலக்க முறை அதிகம் பயன்படாது. ஆயினும், வாட்ஸ்ப்அப், தொலைபேசி வழியாக சில முன்பதிவுகளை ஏற்கிறோம்," என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டின்போது சிறிய, நடுத்தர நிறுவன மையத்தின் உதவியுடன் ரசூல் மளிகைக் கடை இணையச் சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்கியது.
தற்போதைய சூழலில் கடைக்கு நேரடியாக வருவோரின் எண்ணிக்கை 60 விழுக்காடு குறைந்திருப்பதாகக் கூறிய கடை உரிமையாளர் திருவாட்டி ஃபஜிரியா, 70, ஏற்கெனவே உருவாக்கப்பட்ட மின்சேவைகளால் இம்முறை தடுமாற்றம் குறைந்திருப்பதாகத் தெரிவித்தார்.
இருந்தபோதும், அரசாங்கம் என்னதான் உதவினாலும் மின்னிலக்க முறையை பல வர்த்தகங்கள் கடைப்பிடிக்க தொடங்கியிருப்பதால் போட்டித்தன்மை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். மையத்தின் உதவியுடன் மின்வர்த்தகத்தை மேம்படுத்தியுள்ள மெர்லின் கோல்டுஸ்மித் நகைக்கடை, தற்போதைய சூழலில் இணையம் வழியான வர்த்தகத்தை நம்புவதாக அதன் உரிமையாளர் ஜேனிஸ் சின், 39, தெரிவித்தார்.
திருமணங்கள் போன்ற நிகழ்ச்சி களுக்குப் புதிதாக விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடு
களால் பாரம்பரிய ஆடை வர்த்தகங்களுக்கான தேவையும் குறைந்துள்ளன. கடந்தாண்டு இணையம் வழியாகவும் கூடம் ஒன்றின் மூலமாகவும் வர்த்தகம் நடத்தி வந்த 'யஜ்னசேனி' நிறுவனம், இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் தனது கடையைத் திறந்தது.
சூழ்நிலை மேம்படும் என்ற நம்பிக்கையில் கடையைத் தொடங்கியதாகக் கூறிய அதன் உரிமையாளர் வித்தியா பிள்ளை, 30, மீண்டும் அதிகரித்து வரும் கிருமிப் பரவலால் ஏமாற்றம் அடைந்திருப்பதாகக் கூறினார்.
இத்தகைய சூழலில் இணையம் மூலம் வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்தி அதற்குத் தேவையான மின்னிலக்கத் திறன்களை மேம்படுத்த வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடையில் வாடிக்கையாளர்
களின் வருகை வெகுவாகக் குறைந்துள்ள நிலையில் அவர்களை ஈர்க்கும் முயற்சிகளை இணையம் மூலம் முழுமூச்சாகச் செயல்படுத்தப்போவதாக 'பொட்டுக்கார மாமி' கடையின் நிறுவனர் திருவாட்டி ஷ்ருதி சூரியா, 31, தெரிவித்தார்.
"வெளிப்புறங்களில் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படக்கூடும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். எனவே அத்தகைய சூழலைச் சமாளிக்க தேவையான ஏற்பாடுகளை நாங்கள் முன்கூட்டியே செய்து விட்டோம்," என்று கூறிய ஷ்ருதி, வெள்ளம் வருமுன் அணை கட்டுவது சாலச் சிறந்தது என்றார்.