இந்து இளங்கோவன்
சிங்கப்பூரில் கைச் சுத்திகரிப்பானை விநியோகிக்கும் இயந்திரங்கள் கடந்த மாதம் 12ஆம் தேதி முதல் ஏப்ரல் 25ஆம் தேதி வரை பயன்படுத்தப்பட்டன.
தீவெங்கும் உள்ள 108 சமூக மன்றங்களிலும் நிலையங்களிலும் இருந்த தானியங்கி இயந்திரங்களில் வைக்கப்பட்டிருந்த கை
சுத்திகரிப்பானைப் பெற்றுக்கொள்ள குடியிருப்பாளர்கள் தங்களது சொந்த போத்தல்களை எடுத்துச்சென்றனர்.
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் பொதுமக்களுக்கு உதவ நிறைய தொண்டூழியர்கள் முன்வந்தனர். அவர்களில் செர்ட்டிஸ் சிஸ்கோவில் துணை போலிஸ் அதிகாரியாக பணிபுரியும் 42 வயது குமாரி விஜயலெட்சுமி கிருஷ்ணனும் ஒருவர்.
அல்ஜுனிட் சமூக மன்றத்தில் தொண்டூழியராக சேவை புரிந்த இவர் குடியிருப்பாளர்களுடன் உரையாடி அவர்களது தேவைகளைப் புரிந்துக்கொண்டு அவர்களுக்கு உதவுவதில் நிறைய ஈடுபாடு காட்டினார்.
கைச் சுத்திகரிப்பானை விநியோகிக்க உதவுவது, போத்தல்கள் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்வது, குடியிருப்பாளர்களுக்கு கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்ய உதவுவது ஆகிய பணிகளை அவர் கவனித்துக்கொண்டார்.
"அரசாங்கத்தின் புதிய திட்டங்களைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றை பயன்படுத்துவதிலும் பொதுவாக முதியோர்கள்
சிரமப்படுவதுண்டு.
"அரசாங்கம் நடைமுறைப்படுத்தி யுள்ள நடவடிக்கைகள் பற்றியும் கைச் சுத்திகரிப்பானை விநியோகிக்கும் தானியங்கி இயந்திரத்தைப் பயன்படுத்தும் முறை பற்றியும் நானும் எனது சக தொண்டூழியர்களும் குடியிருப்பாளர்களுக்குத் தெளிவாக விளக்கி புரியவைத்தோம். என்னால் முடிந்த வகையில் இந்த கொவிட்-19 நெருக்கடி நிலையின்போது மக்களுக்கு உதவமுடிந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது." என்றார் தொண்டூழியர் விஜயலெட்சுமி.
இவரை போன்றே கை சுத்தி
கரிப்பான் விநியோகத் திட்டத்தில் பங்கேற்ற பல தொண்டூழியர்களில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் இன்ஃப்லைட் மேலாளராக பணிபுரியும் திரு பிரித்விராஜ் நாயுடுவும் ஒருவர்.
கைச் சுத்திகரிப்பான் விநியோக இயந்திரங்கள் சரியான நிலையில் இருப்பதை உறுதிசெய்வது, தேவைப்படும் அளவிற்கு போதுமான கைச் சுத்திகரிப்பான், சமூக மன்றங்களில் உள்ளனவா என்பதை சரிபார்ப்பது, சக தொண்டூழியர்களின் நலனை கவனித்துக்கொள்வது ஆகிய வற்றில் திரு பிரித்விராஜ் கவனம் செலுத்தினார்.
"இந்த சவால்மிக்க காலகட்டத்தில் யாரும் தனியாக இல்லை, நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொவிட்-19 நெருக்கடிநிலையை எதிர்த்துப் போராடுகிறோம் என்பதை இந்த முயற்சி உணர்த்துகிறது," என்றார் திரு பிரித்விராஜ்.
குடியிருப்பாளர்களுக்கு உதவ பல தொண்டூழியர்கள் முன்
வந்துள்ளதாகவும் அவர்களுக்
கிடையே நட்பு மலர்ந்திருப்பதாகவும் திரு பிரித்விராஜ் தெரிவித்தார். குடியிருப்பாளர்கள் தங்களது நன்றிகளை தெரிவிக்கும் வகையில் தமக்கும் தனது சக தொண்டூழியர்களுக்கும் அவ்வப்போது பழங்கள், கேக் போன்றவற்றை தந்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.