ஐம்பது தங்குவிடுதிகளில் வசிக்கும் 6,800க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு 'கப்கேக்'குகளையும் 'குக்கீஸ்'களையும் பொட்டலம் கட்ட உதவிய சிறுவர்கள்.
ப. பாலசுப்பிரமணியம்
பள்ளி விடுமுறையில் பிள்ளைகள் விளையாட்டில் அதிகம் ஈடுபடுவது வழக்கம். ஆனால் 10 வயது சிறுமி ராகாவும் அவரது தம்பியான ஆறு வயது ஓம்மும் ஓர் அர்த்தமுள்ள வகையில் நேரத்தைச் செலவிட்டுள்ள னர். சில வார இறுதி நாட்களில் அவர்கள் சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக வீட்டில் 'சாக்லெட் குக்கீஸ்' பொட்டலங்களைக் கட்டி உதவிய தோடு அவர்களுக்கு வாழ்த்து அட்டைகளையும் வழங்கியுள்ளனர்.
ஜூன் பள்ளி விடுமுறை தொடங்கியதிலிருந்து இவர்களைப் போன்று 150க்கும் மேற்பட்ட பிள்ளைகள் சுமார் 50 தங்குவிடுதிகளில் வசிக்கும் 6,800க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு 'கப்கேக்'கு களையும் 'குக்கீஸ்'களையும் பொட்ட லம் கட்ட உதவி செய்துள்ளனர்.
இம்முயற்சியை 'AGWO' எனும் வெளிநாட்டு ஊழியர் நலத் தொண்டூழிய இயக்கம் கடந்த ஜூன் மாதம் நடுப்பகுதியிலிருந்து வழிநடத்தி வருகிறது.
"தற்போதைய கொவிட்-19 கட்டுப்பாடுகளால் (உயர்த்தப்பட்ட விழிப்பு நிலை) தங்குவிடுதிகளில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது பொழுதுபோக்கு நிலையத்திற்குச் செல்ல முடியாது.
இந்தச் சூழ்நிலையில் தாயகத்தில் உள்ள குடும்பத்தினரைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கும் ஊழியர்களுக்கு பக்கபலமாக நாம் இருக்கிறோம் என்பதை உணர்த்த இம்முயற்சி தொடங்கப்பட்டது," என்று தெரிவித்தார் 'AGWO' இயக்கத்தை நிறுவிய உறுப்பினரான திரு சாமு வேல் கிஃப்ட் ஸ்டீபன், 44.
"வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இளம் பிள்ளைகள் உள்ளனர். தாயகத்திலிருக்கும் சொந்தப் பிள்ளைகளை வெகுநாட்களாக பார்க்காமல் இருக்கும் அவர்களுக்கு இங்கிருக்கும் பிள்ளைகளின் அன்பளிப்புகள் ஆறுதலை அளிக்கும் என்பதால் இதற்கு ஏற்பாடு செய்தோம்," என்றார் 'AGWO' தொண்டூழியர்களில் ஒருவரான தொழிலதிபர் திருமதி ம.பிரியா, 53.
சிறுமி ராகாவின் தாயாரான திருமதி பார்வதி, 40, தம் ஒட்டு மொத்த குடும்பத்தையே இம்முயற்சி யில் ஈடுபடுத்தினார்.
தமது 68 வயது தாயாரான திரு வாட்டி மாலதியுடன் சேர்ந்து தாமும் உணவைத் தயாரித்து, பொட்டங்களைக் கட்டி கொடுத்தார். அவரது கணவர் ராகேஷ், 41, குக்கீஸ் பொட்டலங்களை வெவ்வேறு வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளுக்கு வாகனம் மூலம் அனுப்ப உதவியுள்ளார்.
"கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு சமைப்பது, உணவு விநி யோகம் செய்வது, ஆடைகள், அறைகலன்களைச் சேகரித்து வழங்குவது போன்ற தொண்டூழிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். இந்த பொட்டலம் கட்டும் முயற்சியில் என் பிள்ளைகளின் நண்பர்களும் அவர்களது பெற்றோர்களும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்," என்று காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்றும் திருமதி பார்வதி மேலும் கூறினார்.
ஜூன் நடுப்பகுதியிலிருந்து ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் தீவின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள ஊழியர் தங்குவிடுதிகளுக்கு 'குக்கீஸ்', 'கப்கேக்' பொட்டலங்கள் தொண்டூழியர்கள் உதவியுடன் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்தப் பொட்டலங்களை ெபற்ற வெளிநாட்டு ஊழியர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
"சிறுசிறு அழகுப் பொட்டலங் களில் பிள்ளைகள் 'குக்கீஸ்', 'கப் கேக்'குகளை வைத்து, அவற்று டன் வாழ்த்து எழுதிய அட்டைகளை இணைத்திருந்தனர். அவர்களுடைய முயற்சி எங்களை நெகிழச் செய்து விட்டது," என்று கூறினார் தாகூர் லேன் தங்குவிடுதியில் வசிக்கும் திரு சுப்பையா ஞானமணி, 29.
புதுக்கோட்டையிலிருந்து சிங்கப்பூர் வந்து கடந்த ஏழு ஆண்டு களாக பணியாற்றும் இவர், குளிர்சாதன தொழில்நுட்பர் ஆவார்.
இத்தொண்டூழிய முயற்சி வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நீடிக்கும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் குறைந்தது 12,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை சென்றடைவது குழுவின் இலக்கு.
இவை தவிர, வெளிநாட்டு ஊழியர்களுக்காக மெய்நிகர் தேசிய தினக் கொண்டாட்டக் கலை நிகழ்ச்சியை மனிதவள அமைச்சுடன் இணைந்து 'AGWO' அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
'AGWOSG' ஃபேஸ்புக் பக்கத்தில் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு 8 மணிக்கு இந் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.