கி.ஜனார்த்தனன்
சிறுவனாக இருக்கும்போது தமது தந்தை காரணம் கூறாமல் இரவு நேரங்களில் வெளியே செல்வது பிரகாஷ் கோவிந்தசாமிக்கு மர்மமாக இருந்தது.
மகனுக்குத் தெரியாமல் அந்தத் தந்தை தொண்டூழியமாகச் செய்த கண்காணிப்பு அதிகாரி பணியை தற்போது 45 வயதாக இருக்கும் திரு பிரகாஷ், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகச் செய்து வருகிறார்.
நவம்பர் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, மெய்நிகர் வழியாக நடத்திய விருது நிகழ்ச்சியின்போது 'விபிஓ' எனும் தொண்டூழிய கண்காணிப்புத் திட்டத்தின்கீழ் பிரகாஷும் கௌரவிக்கப்பட்டார்.
கடந்த 1971ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்தத் திட்டம், குற்றவாளிகளின் மறுவாழ்வில் தொண்டூழிய பங்கேற்பையும் சமூக விழிப்புணர்வையும் ஊக்குவிக்கிறது.
நீதிமன்றத்தில் கண்காணிப்புத் தண்டனை விதிக்கப்பட்டோரை கண்காணிக்கும் பணியை திரு பிரகாஷ் போன்ற தொண்டூழி யர்கள் கண்காணித்து அவர்களது தேவையை அறிந்து உதவி செய்து வருகின்றனர்.
ஏறக்குறைய 18 மாதம் முதல் 24 மாதங்கள் வரை கண்காணிப்பின் கீழ் உள்ளவர்களை இந்த அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
"இந்தக் கடமையில் நேர்த்தியைக் காட்டிய காலஞ்சென்ற எனது தந்தை, கண்காணிப்பில் இருந்தவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதற்காக அவர்களைப் பற்றியோ தாம் செய்துவந்த தொண்டூழியம் பற்றியோ குடும்பத்துடன் பகிர்ந்துகொள்ளவில்லை," என்று திரு பிரகாஷ் சொன்னார்.
தமது தாயாரும் தொண்டூழியர் என்பதால் தொண்டூழியம் தமது குடும்பத்தின் வாழ்க்கை முறையாக மாறிவிட்டதாகக் கூறினார் சுயதொழிலில் ஈடுபட்டு வரும் பிர காஷ்.
கண்காணிப்புத் தண்டனைக்கு உட்பட்டவர்களைக் கண்காணிப்பு எதுவும் இல்லாமல் நிதானமாக, சமூகத்துடன் இணையும்படியான நிலைக்குக் கொண்டுவருவதே தமது பணியின் இலக்கு என்று இதுவரை தமது அனுபவத்தில் ஆறு பேரைக் கண்காணித்து வந்த பிரகாஷ் சொல்கிறார்.
"அவர்களுக்கு ஒரு நண்பராக மாறி அவர்களுடைய பொழுதுபோக்குகள், விருப்பு வெறுப்புகள் போன்றவற்றை அறிய முயற்சி செய்வேன். ஒன்றாக சாப்பிடுவோம், அவர் களுக்குப் பிடித்தமான சில இடங் களுக்குச் செல்வோம்.
"கண்காணிப்புப் பணிகளுக்கு உரிய கட்டுப்பாடுகளுடன் தமக்கும் கண்காணிக்கப்படும் நபருக்கும் இடையே யதார்த்தமான, சுதந்திர மான உணர்வு கொண்ட சூழலை உருவாக்க வேண்டும்.
"அவர்களுக்கு அறிவுறுத்துவதில் அவசரம் காட்டாமல் அவர்கள் கூறுவதைக் கேட்டு புரிந்து கொள்வது நல்ல கண்காணிப்பு அதிகாரிக்கு அழகு.
"இளையர்களுக்கும் யோசிக்கும் திறமை உள்ளது. குடும்பத்தினரின் கோபத்திற்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் இவர்களுக்குத் தேவை, பாரபட்சமில்லாத கேட்டலும் புரிந்து கொள்ளும் மனப்பான்மையும்," என்றும் அவர் கூறினார்.
கண்காணிப்பு உத்தரவு முடிந்த பிறகு மனம் திருந்தியவர்கள் நன்றி கூறும்போது தமக்கு ஏற்படும் உணர்வுக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை என்று ஒற்றை யரான திரு பிரகாஷ் தெரிவித் தார்.