அன்பான கணவர், மகன் என இருவர் தமது உலகமாக இருந்தாலும் தீபாவுக்கு புற்றுநோய் ஏற்படுத்திய தனிமையுணர்வு அவரைத் தினமும் சோகத்தில் தள்ளி யது. இதனைச் சமாளிக்க 2017ஆம் ஆண்டிலேயே சிபிஆர், ஏஇடி போன்ற அவசரநிலை உயிர்காப்புத் திறன்களைக் கற்றுக்கொள்ள விரும்பியதால் சமூக மன்றத்தில் நிகழும் பலதரப்பட்ட பயிலரங்குகளுக்கு அவர் விண்ணப்பித்தார்.
அதே ஆண்டு சிங்கப்பூர் புற்றுநோய் சங்கத்தின் 'ரிலே ஃபார் லைஃப்' என்னும் ஓட்டத்தில் தீபா பங்கெடுத்தார். புற்றுநோயாளி களையும் குணமடைந்தவர்களையும் கொண்டாடும் இந்த 'ரிலே' அவருக்கு உற்சாகம் தந்தது.
அதே உற்சாகத்துடன், புற்றுநோயால் அவதிப்படும் பெண்களுக்கு உதவ உருவாக்கப்பட்ட 'பீஷானா' ஆதரவுக் குழுவில் அவர் சேர்ந்தார்.
ஒவ்வொரு மாதமும் புதுப் புது நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யும் இக்குழுவிற்கு 2018ஆம் ஆண்டு துணைத் தலை
வராகவும் பின்னர் தலை
வராகவும் பொறுப்பேற்று அவர் செயல்பட்டார்.
தமது குழுவின் செயல்பாடுகளில் பல மாற்றங்களைச் செய்த தீபா, இன்றுவரை பல்வேறு நடவடிக்கைகளில் மும்முரமாகப்
பங்கெடுத்து வருகிறார். துன்பம் தொடர்ந்து வந்தா லும் பெண்கள் துவண்டு விடாமல் இருப்பதை இவரிடம் கற்கலாம்.