இந்தியர்க்கான இலவச உயில் எழுதும் நிகழ்வு

யுகேஷ் கண்­ணன்

முனீஸ்­வ­ரன் சமூ­க­சேவை மைய­மும் சிண்­டா­வும் இணைந்து வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­களில் வசிப்­ப­வர்­க­ளுக்­காக உயில்­கள் பற்­றிய விழிப்­பு­ணர்­வுப் பயி­ல­ரங்­கை­யும் உயில் எழு­தும் நிகழ்ச்­சி­யை­யும் இல­வ­ச­மாக நடத்­தி­யுள்­ளன.

ஸ்ரீ முனீஸ்­வ­ரன் ஆல­யத் திரு­மண மண்­ட­பத்­தில் இம்­மா­தம் 2ஆம் தேதி காலை 10.30 மணி முதல் பிற்­ப­கல் 12.30 மணி வரை விழிப்­பு­ணர்­வுப் பயி­ல­ரங்கு நடை­பெற்­றது. பிற்­ப­கல் 12.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இல­வச உயில் எழு­தும் சேவை இடம்­பெற்­றது.

பயி­ல­ரங்கை வழக்­க­றி­ஞர் ஜோதி ராம­லிங்­கம் வழி­ந­டத்­தி­னார். இல­வ­ச சேவை நிகழ்ச்­சி­யில் மொத்­தம் 10 வழக்­க­றி­ஞர்­கள் பங்­கேற்றனர்.

நான்கு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் இடம்­பெற்ற இந்­நி­கழ்ச்சி, கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லால் நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு தற்­போது நடத்­தப்­ப­டு­வ­தாக முனீஸ்­வ­ரன் சமூக சேவை மையத்­தின் தலை­வர் ம.ப. கணே­சன் தெரி­வித்­தார்.

இந்­திய சமூ­கத்­தில் பல­ருக்கும் உயில்­க­ளின் முக்­கி­யத்­து­வம் பற்­றிய விழிப்­பு­ணர்வு இல்லை; இத­னால் குடும்ப உறுப்­பி­ன­ரின் இறப்­புக்­குப் பிறகு பல பிரச்­சி­னை­கள் தலை­யெ­டுக்­கக்­கூ­டும் என்­பதை இவர் சுட்­டி­னார்.

"இதற்­குத் தீர்­வு­கா­ணும் நோக்­கு­டன் இல­வ­சப் பயிலரங்கு, உயில் எழு­தும் நிகழ்ச்­சி­ ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்தோம். வீவக இல்­லங்­களில் வசிக்­கும் அனைத்து இந்­தி­யர்­க­ளுக்­கும் அனு­மதி வழங்­கப்­பட்­ட­து," என்றார் திரு கணேசன்.

நிகழ்ச்­சி­யில் 60க்கும் மேற்­பட்டோர் கலந்­து­கொண்­ட­தா­க­க் குறிப்பிட்ட இவர், இளை­யர்­கள் இத்­த­கைய நிகழ்ச்­சி­களில் தொண்­டூ­ழி­யம் செய்ய முன்­வர வேண்­டும் என்­றும் கேட்­டுக்­கொண்­டார்.

முனீஸ்­வ­ரன் ஆல­யத்­தில் 30 ஆண்­டு­க­ளா­கத் தொண்­டூ­ழி­யம் செய்­து­வ­ரு­கி­றார் இந்­நி­கழ்ச்­சி­யில் இல­வ­ச சேவை வழங்­கிய வழக்­கறி­ஞர்­களில் ஒரு­வ­ரான 65 வயது ஹரிபி­ர­சாத்.

பொறி­யி­யல் நிறு­வ­னம் ஒன்­றில் ஆலோ­ச­கரா­கப் பணி­பு­ரி­யும் இவர், "இந்­தி­யர்­களில் பலர் இறப்­பைப்­பற்­றி­யும் அதன் பிறகு தங்­க­ளது சொத்­து­க­ளின் நிலை என்ன என்பதைப் ­பற்­றி­யும் பேசவோ சிந்­திக்­கவோ தயங்­கு­கின்­ற­னர். ஆனால், இறந்­த­பின் உடைமைகள் யாரைச் சேரவேண்டும் என்று முன்பே முடிவெடுப்பது, பிற்­கா­லத்­தில் குடும்­பத்­தி­ன­ரி­டையே ஏற்­படக்­கூ­டிய சண்­டை­க­ளை­யும் பூசல்­களை­யும் தடுக்­கும்," என்றார்.

உயில் எழுத 300 வெள்­ளி­யி­லி­ருந்து 400 வெள்ளி வரை செல­வா­க­லாம்; கட்­ட­ணத் தொகை கார­ண­மாக யாரும் உயில் எழு­தா­மல் இருக்­கக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவே இந்த நிகழ்ச்சி இல­வ­ச­மாக நடத்­தப்­பட்­டது என்றார் இவர்.

முன்பே உயில் எழு­தி­யி­ருந்­தா­லும், அதுகுறித்த முக்­கி­யத் தக­வல்­க­ளை­யும் நுணுக்­கங்­க­ளை­யும் தெரிந்­து­கொள்ள இப்பயிலரங்கில் கலந்­து­கொண்­ட­தா­கக் கூறி­னார் ஓய்­வு­பெற்ற அறி­வி­யல் ஆசி­ரி­ய­ரான 78 வயது சுதந்­திர வேலு.

உயி­ரு­டன் இருக்­கை­யில் உயில் எழுதி, நமது சொத்து, நகை, பணம் போன்­ற­வற்றை மனத்­திற்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளுக்­குப் பகிர்ந்­த­ளிப்­பது அவர்­க­ளின் ஆனந்­தத்­தைக் காண வாய்ப்­ப­ளிக்­கும் என இவர் கரு­து­கி­றார். இத்­த­கைய வாய்ப்பை இழக்க விரும்­பா­த­தால் ஏற்­கெ­னவே உயில் எழு­தி­யுள்­ள­தா­கத் திரு­வாட்டி சுதந்­திர வேலு தெரி­வித்­தார்.

இதனை எடுத்­துக்­கூறி தனது சகோ­தர, சகோ­த­ரி­க­ளை­யும் உயில் எழுதச் செய்­துள்ள இவர் இது­வரை உயில் எழு­தாத தனது நண்­பர்­களையும் உயில் எழுத ஊக்­கு­வித்து வரு­கி­றார்.

தனது கண­வர் எட்டு ஆண்டு­களுக்கு முன்பு இறந்­த­போது குடும்­பத்­தில் பல குழப்­பங்­களும் பிரச்­சினை­களும் எழுந்­த­தால் எதிர்­கா­லத்­தில் அச்­சூழ்­நி­லை­யைத் தடுக்க, தான் இந்த உயில் எழு­தும் நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­ற­தாகக் கூறி­னார் தொழி­ல­தி­பர் மகா­லட்­சுமி.

உயி­ரு­டன் இருக்­கை­யி­லேயே, இறந்­த­பின் சொத்து, பணம் போன்­றவை யாருக்­குச் செல்­லும் என முடி­வெ­டுத்­துக்­கொள்­வது நமக்கு மன நிம்­ம­தி­ய­ளிப்­ப­தோடு நம்­மைச் சேர்ந்­த­வர்­க­ளுக்­கும் பய­ன­ளிக்­கும் என்­கி­றார் 60 வய­தா­கும் திரு­வாட்டி மகா­லட்­சுமி.

முனீஸ்­வ­ரன் சமூ­க­சேவை மைய­மும் சிண்­டா­வும் இணைந்து இது­போன்ற இலவச நிகழ்ச்­சி­க­ளைத் தொடர்ந்து நடத்­தத் திட்­ட­மிட்­டுள்­ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

படம்: யுகேஷ் கண்ணன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!