கடந்த ஜூலை 25ஆம் தேதியன்று ஜாமியா சிங்கப்பூர் அறநிறுவனத் தலைவர் டாக்டர் முஹம்மது ஹஸ்பி அபுபக்கர் அழைப்பில் இந்திய முஸ்லிம் பேரவை
மேலாண்மைக்குழு கூடியது.
ஜாமியா தலைமை நிலையத்தில் நடைபெற்ற இந்தப் புரிந்துணர்வு சந்திப்பில் அறநிறுவனம் செய்து
வரும் சேவைகளையும் மக்கள் நலப்பணிகளையும் டாக்டர் ஹஸ்பி, மூத்த துணைத் தலைவர் டாக்டர் சலீம், பொதுச் செயலாளர் ஜாஃபர் மைதீன் மற்றும் செயல் திட்ட
இயக்குனர் ஹபீஸ் மாலிக் ஆகியோர் விளக்கினர்.
இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவர் ஹாஜி முஹம்மது பிலால் தலைமையின்கீழ் கலந்துகொண்ட அப்பேரவையைச் சேர்ந்த
குழுவினருக்கு இந்த நிகழ்வு நல்லதொரு புரிந்துணர்வு சந்திப்பாக அமைந்தது எனத் தெரிவிக்கப் பட்டது.