தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவைப் பிரிவு ஏற்பாடு செய்திருக்கும் இரு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற இருக்கின்றன.
'பொன்னியின் செல்வன் காமிக்ஸ் தயாரிப்பாளர் கார்த்திகேயனுடன் ஓர் உரையாடல்' எனும் நிகழ்ச்சி இன்று மாலை ஐந்து மணி முதல் ஆறரை மணி வரை 'ஸூம்' தளத்தில் நடைபெறும்.
கூத்துப் பட்டறைக் கலைஞராக வாழ்வைத் தொடங்கிய கார்த்திகேயன், பின்னர் உயிரோவியம், சிற்பம் எனப் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர்.
பொன்னியின் செல்வன் என்ற புகழ்பெற்ற உயிரோவியக் கதைப் புத்தகப் படைப்புக்குழுத் தலைவர்.
உயிரோவியப் படைப்புகளில் 25 ஆண்டு அனுபவம் மிக்க கார்த்திகேயனுடன் உரையாடும் சந்திப்பில் இணைந்துகொள்வதற்கான அடையாள எண்: 964 5451 6291 மறைச்சொல்: 082982
சுவா சூ காங் பொது நூலகத்தின் நான்காம் தளத்தில் இன்று பிற்பகல் மூன்று மணி முதல் மூன்றரை மணி வரை 'கட்டுக்கதையல்ல காட்டுக்கதை!' எனும் கதை சொல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.
விலங்குகளின் கதைகளைச் சொல்லும் இந்நிகழ்ச்சியில், சிங்கப்பூரில் நடந்த உண்மைக் கதைகள், சம்பவங்கள், மீட்புப் பணிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கதைகளைக் கேட்கலாம்.
இதற்கு, https://www.eventbrite.sg/e/acres-its-not-fiction-but-real-jungle-stori… எனும் இணைய முகவரியில் பதிந்து கொள்ளவேண்டும்.
'ஏக்கர்ஸ்' எனப்படும் விலங்குநலப் பாதுகாப்பு அமைப்பின் தொண்டூழியர்கள் இதனை நடத்துகிறார்கள். அடுத்த நான்கு மாதங்களின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இத்தகைய நிகழ்ச்சி இடம்பெறும்.