உள்ளூரில் புதிதாக 57 பேருக்கு கிருமித்தொற்று
உள்ளூரில் இன்று (ஆகஸ்ட் 14) நண்பகல் நிலவரப்படி புதிதாக 57 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 29 பேர், முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டனர்.
முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடைய மற்ற 11 பேருக்கு கண்காணிப்புப் பரிசோதனை மூலம் தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எஞ்சிய 17 பேருக்கு எப்படி கிருமி தொற்றியது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
உள்ளூரில் கிருமி தொற்றியவர்களில் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர். அவருக்குக் கடுமையான நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் வந்திறங்கியபோது அவருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 66,119ஆக உள்ளது.