நித்திஷ் செந்தூர்
தன்முனைப்பும் புத்தாக்கமும் மாணவர்களிடையே வளர 'நம்பிக்கை விதை' எனும் பயிலரங்கு உயர்நிலை ஒன்றில் பயிலும் உயர் தமிழ் மாணவர்களுக்காக சென்ற மாதம் 29 ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 35 மாணவர்கள் இதில் கலந்துகொண்டு பயனடைந்தனர். சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியியல் துறை மாணவி மாஷா நஸீம், 23, தனது புதிய கண்டு பிடிப்புகள் பற்றி சிங்கப்பூர் மாணவர்களிடையே பகிர்ந்துகொண் டார். சக மாணவர்களைப் போல் இல்லாமல் தான் தனித்து இருக்க வேண்டும் என்ற எண்ணம் இளம் அகவையிலே வேரூன்றி இருந்ததால் அவருக்கு உரிய தனித்துவமான பாதையை வகுத்தார் மாஷா நஸீம். ஓவியம் வரைவதிலும் பரத நாட்டியத்திலும் நிறைந்திருந்த இவரின் ஆர்வம் ஒன்பதாம் வயதில் அறிவியலின் மீது திரும்பியது.
உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடந்த 'நம்பிக்கை விதை' பயிலரங்கில் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பொறியியல் மாணவி மாஷா நஸீம் சிங்கப்பூர் உயர்நிலை 1 மாணவர்களுடன் தனது சாதனை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். படம்: உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம்