ப. பாலசுப்பிரமணியம்
எந்தச் செயலிலும் முதல் படியை எடுப்பதே மிகக் கடினம் என்பதை பலர் கூறக் கேட்டிருக்கிறோம். சுமார் ஈராண்டுகளுக்கு முன் குமாரி ஸ்மிதாவும் அந்த நிலையில்தான் இருந்தார். இந்திய திரைப்படங்களில் தோன்றும் நடிகைகள்போல் தானும் சேலையில் பவனி வர வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது ஆனால் இதனையெல்லாம் செய்ய முடியுமா என்ற ஐயமும் அவருக்குள் மேலோங்கி இருந்தது. முயற்சி ஏதும் செய்யாவிட்டால் தனது தரம் என்னவென் பதை அறிந்துகொள்ள முடியாது என்பதை உணர்ந்து, தைரியமாக ஜூரோங் கிரீன் சமூக மன்றம் நடத்திய சேலை அழகுராணிப் போட்டியில் இவர் பங்குபெற்றார். அம்முறை அவர் வெற்றியாளர் கிரீடத்தை வெல்லவில்லை; ஆனால் பங்கெடுத்த முதல் போட்டியிலேயே சிறந்த ஆளுமைக்கான விருதைப் பெற்றது ஸ்மிதாவுக்கு ஊக்கம் தந்தது.
தனது தன்னம்பிக்கையை மேலும் வளர்த்துக்கொள்ள சேலை விளம்பரங்களில் இவர் இடம்பெறத் தொடங்கினார். பிறகு, இவ்வாண்டு பிப்ரவரி மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய அனைத்துலக சேலை அழகுராணிப் போட்டியில் மகுடம் சூடினார். சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் முழு நேரமாக தாதியர் பட்டப்படிப்பை மேற்கொண்டு, பகுதிநேரமாக மருத்துவமனையிலும் வேலை செய்துவந்த நிலையில் பல நாட்களாக ஒத்திகைகளுக்குச் சென்று இந்தப் போட்டியில் அவர் வென்றார்.
அக்டோபர் மாதம் மற்றொரு அனைத்துலக அழகு ராணி போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்க லாஸ் வேகாஸ் செல்கிறார் ஸ்மிதா. படம்: லூமியர் இண்டர் நேஷனல்