மாணவிகளும் மாணவர்களும் ஒன்றாக அமரவும் சேர்ந்து நடக்கவும் பாகிஸ்தான் பல்கலைக்கழகம் ஒன்று தடை விதித்துள்ளதாகப் பத்திரிகை செய்திகள் தெரிவித்தன. பாகிஸ்தானில் உள்ள ஸ்வாட் பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவிப்புப் பலகையில் இதற்கான அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறுபவர் களுக்கு ரூ.50 முதல் 5000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெற்றோர்களுடன் பல்கலைக் கழக நிர்வாகம் அவரசக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. இந்தப் புதிய தடைக்கு அவர்களிடம் ஒப்புதல் கையெழுத்தும் பெற்றுள்ளதாக அந்நாட்டுப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தடை சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாகவும் செய்திகள் தெரிவித்தன.