தமிழகத்தில் மே 16ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல், போட்டியிடும் அனைத்துக் கட்சிகளுக்குமே அச்சத்தைத் தந்துள்ளது. குறிப்பாக ஆளும் கட்சியான அதிமுகவின் அமைச்சர்கள் தலைநகர் சென்னையில் வெல்லும் வாய்ப்பு மிகக் குறைவு என்று கூறப்படுகிறது. அண்ணா நகர் தொகுதியில் அமைச்சர் கோகுல இந்திராவும் ஆயிரம் விளக்குத் தொகுதியில் அமைச்சர் வளர்மதியும் போட்டியிடுகின்றனர். இந்த இரு தொகுதிகளைத் தவிர, துறைமுகம் மற்றும் திமுக பொருளாளர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் ஆகிய தொகுதிகள் அதிமுகவின் வெற்றி வாய்ப் பைப் பறிக்க வல்லனவாக உள்ளதாக ஜெயலலிதாவுக்கு உளவுத் துறை தகவல் கூறியுள்ளதாம்.
துறைமுகத் தொகுதியில் அதிமுகவின் வடசென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் கு.சீனிவாசன் என்பவர் நிறுத்தப்பட்டிருக்கிறார். இவருக்கு எதிராக பி.கே.சேகர் என்பவர் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். இவர் முன்பு அதிமுகவின் மாவட்டச் செயலாளராக இருந்தவர். ஆயிரம் விளக்குத் தொகுதியில் வளர்மதியின் முன் னாள் சீடரான கு.க.செல்வம் திமுக சார்பில் வளர்மதிக்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ளார். இதேபோல் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து வில்லிவாக்கம் அதிமுக எம்.எல்.ஏ.வான ஜே.சி.டி. பிரபாகரன் களமிறக்கப்பட்டுள்ளார். எனவே சென்னையில் களமிறங்கும் அதிமுகவின் முக்கிய புள்ளிகள் அனைவரும் வெற்றிபெறும் வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.