விழுப்புரம்: தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு குற்றம் சாட்டினார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தத் தேர்தலில், கம்யூனிஸ்ட், தேமுதிக, மதிமுக, தமாகா, விசிக கட்சிகள் அடங்கிய நல்ல கூட்டணி உருவாகியுள்ளது.
முதல்வர் போட்டியிடும் ஆர்கே நகர் தொகுதியில் சமுக நீதிக்காக போராடிய, எந்தக் கட்சியையும் சேராத பொது நபரான வசந்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாகப் போட்டியிடுகிறார். "தேர்தல் ஆணையம் விதிமீறல்களைக் கண்டுகொள்வ தில்லை. தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து வைகோ விளக்கமும் அளித்துவிட்ட நிலையில், நீண்டநாள்களுக்குப் பிறகு விளக்கம் தர வேண்டும் என்று கடிதம் வந்துள்ளது," என்றார் அவர்.