நாகர்கோயில்: தமிழகத்தில் தலைவிரித்தாடும் லஞ்ச ஊழலையும் மதுவையும் ஒழிக்கும் குறிக்கோளால்தான் 'நாம் தமிழர்' கட்சி தனித்துப் போட்டியிடுகிறது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நாகர்கோயிலில் நடந்த கூட்டத்தில் மேலும் பேசிய அவர், மதுவை ஒழிப்போம் என்று கூறும் இரு கட்சிகளும் முதலில் தங்க ளின் கட்சிகளில் உள்ள உறுப்பினர்களின் மது ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்போம் என்கிறார்கள். ஆட்சியில் இருக்கும்போது ஏன் ஒழிக்கவில்லை. படிப்படியாக மூடுவோம் என்கிறார் ஜெயலலிதா,
இதே குமரியில் சசிபெருமாள் ஒரு கடை யைத்தான் மூடச் சொன்னார். அந் தக் கடையையே இன்னும் மூடவில்லை. படிப்படியாக குறைக்கக் கூடிய எவ்வித அறிகுறியையும் கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக அரசு காட்டவில்லை. அத்தனை போராட்டங்களுக்கும் பதில் சொல்லாமல் மக்களின் கோரிக்கைக்குச் செவி சாய்க்காமல் இப்போது தேர்தல் வந்தவுடன் படிப்படியாகக் குறைக்கிறோம் என்கிறார் ஜெய லலிதா. இதைத் தேர்தலுக்கான வெற்று வாக்குறுதியாகத்தான் பார்க்க முடிகிறது. "தாய்மொழிக் கல்வி கட்டாயம் தேவை," என்றார்.
அப்போது கூட்டத்தில் குடிபோதையில் இருந்த ஒருவர், சீமானைப் பார்த்து 'தலைவா...' என்று குரல் எழுப்பினார். அப்போது காவல்துறையினர் அந்த மனிதரை அடித்து இழுத்துச் சென்றனர். இதனைப் பார்த்த சீமான், 50 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் சாதனை இதுதான் என்றார். {வைகுண்டத்தில் பேசும் போது, "நாம் தமிழர்" கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தால் தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்றார்.