சென்னை: வறுமை காரண மாகவே தமிழகத்தில் விவசாயி கள் தங்களுடைய உயிரை மாய்த்துக்கொள்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், விவசாயிகள் எவரும் வறுமை அல்லது கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக்கொள்ள வில்லை என முதல்வர் ஜெய லலிதா கூறியதைக் கண்டிப்ப தாகத் தெரிவித்துள்ளார். "திருச்சியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் விவசாயிகள் குடும்பப் பிரச்சினைகளால்தான் உயிரை மாய்த்துக்கொண்ட தாகக் கூறியுள்ளார். விவசாயி களின் இறப்பை கொச்சைப் படுத்தும் ஜெயலலிதாவின் இந்தக் கருத்து கண்டிக்கத் தக்கது.
"விவசாயிகளுக்கான தேர் தல் வாக்குறுதிகள் அனைத் தையும் நிறைவேற்றிவிட்டதாக வும் முதல்வர் பச்சைப் பொய் யைக் கூறியுள்ளார்," என்று ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். 2011ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், கரும்பு கொள்முதல் விலை 2011ஆம் ஆண்டில் 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக் கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட் டுள்ள அவர், அதற்கு மாறாக ரூ.2,100 மட்டுமே தரப்பட்டதாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.