புதுடெல்லி: ரஷ்யத் தலை நகர் மாஸ்கோவில் நடந்த அனைத்துலக மணற்சிற்பப் போட்டியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்தங்கப் பதக்கத்தை வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்து உள்ளார். வெற்றியுடன் புவனேஷ்வர் திரும்பிய சுதர்சனை அவரது குடும்பத்தினரும் அவரிடம் பயிற்சி பெறும் மாணவர்களும் வரவேற்றனர். பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார் சுதர்சன்.
இந்த கலைத்திறனை மேலும் வளர்த்து எதிர்காலத்தில் இந்தியாவிற்கு பல பெருமைகளைச் சேர்க்க சுதர்சனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் மோடி. இதுவரை 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மணற்சிற்பப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள சுதர்சன் இந்தியாவிற்காக பல விருதுகளைப் பெற்று தந்துள்ளார். இந்த சாதனைக்காக இவருக்கு 2014-ஆம் ஆண்டு நாட்டின் 4-வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
மணல் சிற்பக் கலைப் போட்டியில் வென்ற தங்கப் பதக்கத்தை சுதர்சன் பட்நாயக் (வலது) பிரதமர் மோடியிடம் (இடது) காட்டுகிறார்.
படம்: இந்தியத் தகவல் சாதனம்