அதிமுக தேர்தல் அறிக்கை மிகப்பெரிய நகைச்சுவை: குஷ்பு

சென்னை: அதிமுகவின் தேர் தல் அறிக்கையானது மிகப் பெரிய நகைச்சுவை என்று நடிகை குஷ்பு விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான அவர் நேற்று முன்தினம் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மலிவு விலை சீன கைபேசிகளை கொடுத்து தமி ழக மக்களை ஏமாற்றிவிடலாம் என முதல்வர் ஜெயலலிதா நினைப்பதாக குற்றம்சாட்டினார். "முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று விரும்பி இருந்தால், அவர் முதல்வராகப் பதவியேற்ற உடனேயே அதைச் செய்திருக்க வேண்டும். ஆனால் தமது ஆட்சிக் காலத் தில் அவர் ஒன்றுமே செய்யவில்லை. "மாறாக, தேர்தல் நேரத்தில் இலவசங்களை அறிவித்து மக்களை கவர நினைக்கிறார். அவரது முயற்சிக்கு வெற்றி கிடைக்காது," என்றார் குஷ்பு.

மக்கள் நலனை முக்கியம் என திமுக, காங்கிரஸ் கூட் டணி கருதுவதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் நலனை மனதில் வைத்துதான் திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட் டுள்ளதாகத் தெரிவித்தார். "மக்களுக்காகவே பல்வேறு நல்ல திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள் ளன. திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானதை பார்த்து ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. "உடனே அனைவருக்கும் இலவச கைபேசி அளிப்பதாக அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 350 ரூபாய் மதிப்புள்ள கை பேசிகளை அளித்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார் ஜெய லலிதா," என்றார் குஷ்பு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!