நெல்லை: தென்காசி தொகுதிக்குட்பட்ட 56வது வாக்குச்சாவடியில் நேற்று நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் மாலை 2 மணியளவில் 55 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குச்சாவடியில் தேர்தலுக்கு முன்னர் வாக்குப்பதிவு ஒத் திகை நடத்தப்பட்டது. அப்போது பதிவான 52 வாக்குகளை நீக்காமலேயே 16ஆம் தேதியன்று அசல் தேர்தலுக்கான வாக்குப்பதிவை நடத்திவிட்டனர்.
இதுகுறித்து தெரியவந்ததும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தமாகா வேட்பாளர், அதிமுக முகவர் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதையேற்று மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உடனடியாக உத்தரவிட்டது. அதன்படி நேற்று காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு துவங் கியது. மாலை 6 மணிவரை நடந்த வாக்குப்பதிவில் குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகள் பதிவாகி உள்ளன. இதையடுத்து இந்த வாக்குகளும் இன்றே எண்ணப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.