தேர்தல் ஒத்திவைப்பை ஏற்க இயலாது: கனிமொழி

சென்னை: தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதை ஏற்க இயலாது என திமுக மாநிலங்களவை உறுப் பினர் கனிமொழி தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதில் அரசியல் பின் னணி இருப்பதாகவும் அவர் சாடி உள்ளார். "தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது சரியல்ல. இதனை திமுக சட்ட ரீதியாக சந்தித்து வருகிறது. நிச்சயமாக நியாயம் வழங்கப்படும் என்று நம்பிக்கையோடு காத்துக் கொண்டு இருக்கிறோம்," என்றார் கனிமொழி.

தேர்தல் ஒத்தி வைப்பு தொடர் பில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக தலைவர் கருணாநிதி தனது கருத்தை தெளிவாகவும் திட்டவட்டமாகவும் கூறியிருப்ப தாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக திமுக சட்ட ரீதியில் போராடுவதாகத் தெரிவித்தார். "தேர்தல் ஒத்திவைப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் நாங்கள் வழக்காடி வருகிறோம். நிச்சயமாக நியாயம் கிடைக்கும்," என்று கனிமொழி மேலும் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!